Innovative scam in the name of marriage! Teen at the police station with tears!

கோவில்பட்டியைச் சேர்ந்தமித்ரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையை இழந்த இவர் தனது தாயுடன் வசித்துவருகிறார். இவர்கள்வேலைக்காகசென்னையில் வசித்துவந்துள்ளனர். அப்போது,மித்ராதனது பக்கத்து வீட்டில் வசித்துவந்த அஜித் எனும்இளைஞரைக்காதலித்துள்ளார். இதனை அவர், தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அஜித்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்மித்ராவின்தாய் முதலில் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு,மித்ராசமாதானம் செய்யவே அவர்கள் திருமணத்திற்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி அவர்களது திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அஜித் மதுஅருந்துவதைத்தொடர்ந்ததால், அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்து நடந்துமித்ராமீண்டும் தனது தாயுடன் வசித்துவந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில்,மித்ராவின்தாய் அவருக்கு இரண்டாம் திருமணம்செய்துவைக்கதிருமணம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ஒரு நபர் சித்ராவுக்குபோன்செய்து, திருமண இணையதளத்தில்மித்ராவைபார்த்ததாகவும், அவரை திருமணம்செய்துகொள்ளசம்மதம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால்மித்ரா, தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தனது தாயின் கட்டாயத்திற்காக அதில் பதிவேற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், விடாப்பிடியாக அந்த நபர், தானும் விவாகரத்து ஆனவர்தான் என்றும், சிறிது காலம்பழகிபார்க்கலாம் அதன்பிறகு ஒத்துவந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதன்படி இருவரும்செல்போனில்பேசி பழகிவந்துள்ளனர். இந்நிலையில், ஒரு நாள் திடீரென அந்த நபர்மித்ராவின்சொந்த ஊரானகோவில்பட்டிக்கு வருவதாகதெரிவித்திருக்கிறார். அதன்படி கடந்த 19ம் தேதி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் அந்தநபரைசந்திக்கமித்ரா, தனது இருசக்கர வாகனத்தில்அங்குசென்றுள்ளார். காலை நேரத்தில் அங்கு வந்த அந்த நபர்,மித்ராவிடம்பசிக்கிறது ஏதாவது பெரியஉணவகத்திற்குப்போகலாம் என்றுசொல்லிக்கேட்டுள்ளார்.மித்ராவும்அருகிலிருந்தபெரிய உணவகம்ஒன்றுக்குஅழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு திடீரென அந்த நபர், தன் பையிலிருந்து ஒருசெயினைஎடுத்துமித்ராவின்கழுத்தில் போட்டுவிட்டுள்ளார். மேலும்,மித்ராகழுத்திலிருந்தபழையசெயின்இந்த புதியசெயினின்அழகைகெடுப்பதாகவும், அந்தப் பழையசெயினைதன்னிடம் தந்தால் தான் அதனைபோட்டுக்கொள்வதாகவும்தெரிவித்துள்ளார். அதன்படிமித்ராவும்அந்தசெயினைஅவரிடம் கொடுத்துள்ளார். மேலும், ஒருகவரைமித்ராவிடம்கொடுத்து அதில் ரூ. 3இலட்சம்இருப்பதாகவும் அதனை இன்றைய செலவுக்குவைத்துக்கொள்ளலாம்என்றும் தெரிவித்துள்ளார். பின் அங்கு இருந்து இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, அந்த நபர்மித்ராவிடம்கொஞ்ச தூரம்பைக்கில்போவோம் என்று சொல்லியுள்ளார்.

அதனைத் தொடர்ந்துமித்ராவின்கைப்பை, அவரின் கைப்பேசி, அந்த நபரின் கைப்பேசி உள்ளிட்டவற்றைமித்ராவின்கைப்பையைஇருக்கையின் கீழ் இருக்கும் பெட்டியில்வைத்துப்பூட்டிவிட்டு,பைக்கைஅவர் எடுத்துள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு அந்த நபர், “பைக்சூப்பராஇருக்கு. நான் இது வரவீலிங்பண்ணினது இல்லை. ஒரு முறைவீலிங்பண்றேன்” என்று கேட்டுள்ளார். அதனால்மித்ராவும்பைக்கிலிருந்துகீழே இறங்கி நிற்க அந்த நபர்பைக்குடன்அங்கிருந்து தப்பித்துள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தமித்ராஅங்கிருந்த ஒரு முதியவரின் உதவியுடன் சொந்த ஊருக்கு வந்து நடந்ததை தன் தாயிடம் கூறியுள்ளார்.

அதன்பிறகுமித்ராவும், அவரது தாயும் சாத்தூர்தாலுகாகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், தனது 3 பவுன் தங்கச்செயின்,செல்போன்,பைக்எல்லாவற்றையும்திருடிக்கொண்டு சென்றுவிட்டார். அவரைப் பார்த்தால் அடையாளம் காட்டமுடியும். நான் இழந்த ரூ.1,25,200 மதிப்புள்ள பொருட்களை எல்லாம் கண்டுபிடித்துமீட்டுத்தரவேண்டும்எனத்தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரை ஏற்ற சாத்தூர்தாலுகாகாவல்துறையினர், அடையாளம் தெரியாத அந்த நபர் மீதுபிரிவு406 (நம்பிக்கை மோசடி செய்தல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.