Skip to main content

கரோனா காலத்தில் பசியை போக்க உதவுதாக  8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... நான்கு பேர் கைது!!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
inicident in kanyakumari thengaipatinam

 

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறது அந்த ஏழை குடும்பம். கரோனா பாதிப்பால் கோழிக்கடையில் வேலை பாா்த்து வந்த அப்பா வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட தாயும் வீட்டுக்குள்ளே இருக்கும் நிலை. இதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாததால் தாய் தந்தையின் பசியை போக்க 8 வயது சிறுமி அந்த பகுதியில் உதவி கேட்டு வீடு வீடாக சென்று வந்தார்.


உதவி செய்யும் நல்ல மனம் கொண்ட என பலரும் காசு, சாப்பாடு கொடுத்து உதவினார்கள். இதில் சில காட்டு மிராண்டிகளான முதியவர்கள் முகமது நூகு (75), அப்துல் ஜபார் (66), ஜாகீர் உசேன் (53), சகாயதாசன் (52) ஆகிய 4 பேரும் தனித்தனியாக ஒருவருக்கு ஒருவர் தொியாமல் சிறுமிக்கு உதவுவதாக கூறி தினமும் அந்த சிறுமியை பாலியல் இச்சைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அறியா பருவத்தில் இருக்கும் அந்த சிறுமி இதை செய்தாதான் உதவி செய்கிறார்கள் என நினைத்து அடிக்கடி அந்த காட்டு மிராண்டிகள் அழைக்கும்போது சென்றியிருக்கிறார். ஒருகட்டத்தில் இதை அந்த பகுதியில் உள்ள 2 சிறுவர்களும் பார்த்து அவா்களும் அந்த சிறுமியை தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அந்த சிறுமி நடப்தை எல்லாம் தந்தையிடம் கூறியிருக்கிறார். இதனால் அதிா்ச்சியடைந்த தந்தை ஊாில் உள்ளவா்களிடம் கூறியிருக்கிறார். உடனே ஊாில் உள்ளவா்கள் சிறுமி கூறியதையெல்லாம் வீடியோவாக பதிவு செய்து மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத்திடம் கொடுத்தனர்.

 

 


அதனை குளச்சல் ஏஎஸ்பிக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார் எஸ்பி. இதனையடுத்து விசாரித்து இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அந்த 4 காட்டு மிராண்டிகள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனா். பின்னா் 4 பேரையும் சிறைக்கு அனுப்பிவிட்டு, 2 சிறுவா்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார்கள்.

தேங்காய்பட்டணம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பேசிய தமுமுக மாவட்ட தலைவா் ஜிஸ்தி முகம்மது, “சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அவா்களுக்கு கடுமையான தண்டனையை காவல்துறை வாங்கி கொடுக்க வேண்டும். இ்ந்த சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டியிருந்தால் அவா்களையும் கைது செய்ய வேண்டும். மேலும் அந்த ஏழை குடும்பத்துக்கு நிரந்தரமான ஒரு வருவாயை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.