Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி... ராணுவவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020


 

india china border army incident ramanathapuram district admk mla

 

இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச்  சேர்ந்த இந்திய ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் பலரும் கலந்து கொண்ட நிலையில், உள்ளூரில் இருந்தும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறித்தும், இது சம்பந்தமான அவரது கருத்தினை தாங்கியும், "ராணுவ வீரரின் இறுதிச்சடங்கைப் புறக்கணித்தாரா முன்னாள் அமைச்சர்..?" என்ற தலைப்பினில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக நக்கீரனிடம் கூறியது போல், வீரமரணமடைந்த ராணுவ வீரரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியும், குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

 

india china border army incident ramanathapuram district admk mla

 
லடாக் பகுதியில் இந்தியா ராணுவத்தைச் சேர்த்த 20 ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தினரால் சமீபத்தில் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகியது. இதில் வீரமரணமடைந்த 20 வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தினைச் சேர்ந்த திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பதால் அக்கிராம மக்கள் மட்டுமின்றி தகவல் கேள்விப்பட்ட அனைவரும் சோகமயமாகினர். வீரமரணமடைந்த பழனியின் உயிரற்ற உடல் நேற்று முன்தினம் கடுக்கலூர் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

india china border army incident ramanathapuram district admk mla

 

இதில் மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வேளையில், முன்னாள் அமைச்சரும், இந்நாள் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன் மட்டும் மிஸ்ஸிங்.! இது சர்ச்சையை ஏற்படுத்திய வேளையில், "எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் தான் வரவில்லை. வேண்டுமென்றே புறக்கணித்தேன் என்பது தவறான செய்தி. ராணுவ வீரரின் தொண்டு அளப்பரியது. அதைப் போய் புறக்கணிப்பேனா..? உடல் நிலை சரியானதும் அவரது இல்லத்திற்குச் சென்று தேவையான நிதியுதவி வழங்கி, அவர்கள் குடும்பத்தை மேம்படுத்துவதே என் எண்ணம்." என்று நக்கீரனிடம் பதிலளிக்க செய்தி வெளியாகி மாவட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

 

india china border army incident ramanathapuram district admk mla

 

இந்நிலையில், நேற்றைய தினம் கடுக்கலூரிலுள்ள ராணுவ வீரரின் நினைவிடத்திற்குச் சென்ற அதிமுக. கழக மருத்துவ அணி துணை செயலாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர், வீரமரணமடைந்த குழந்தைகளை அருகினில் அழைத்து ஆறுதல் கூறினார். இதேவேளையில் ராணுவ வீரரின் மனைவி வானதிதேவியிடம் ரூ.2 லட்சத்தையும், அவரது தந்தை காளிமுத்துவிடம் ரூ.25 ஆயிரத்தையும் தனித்தனியே வழங்கியவர், "தமிழக அரசு கூறியது போல் ராணுவ வீரரின் மனைவிக்கு விரைவில் ஆசிரியர் பணி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.