Skip to main content

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; தேமுதிக ஆர்ப்பாட்டம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

increase in nh tollgate booth fees Dmdk involved

 

சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்வை எதிர்த்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சுங்கக் கட்டணம் கடந்த 1 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அவ்வாறு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

சென்னை போளூரில் உள்ள சுங்கச்சாவடி முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அதேபோன்று திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு, விஷ பூச்சிகளை பிடிக்க பிரத்யேக எண்கள் அறிவிப்பு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Notification of special numbers for catching snake venomous insects

 

                                                       கோப்புப்படம் 

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

மழை வெள்ளத்தில் பாம்பு, விஷப்பூச்சிகள் பாதிப்புகள் இருந்தால் அவற்றை பிடிப்பதற்கான எண்கள் வழங்கப்பட்டுள்ளது. போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, நெற்குன்றம், கோயம்பேடு பகுதிகளில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு பாபா (98 41 58 88 52) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம், பெரம்பூர் பகுதிகளுக்கு சக்தி (90 94 32 13 93) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  அண்ணா நகர் முதல் பட்டாபிராம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு கணேசன் (74 48 92 72 27) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ஜெய்சன் (80 56 20 48 21) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு ராபின் (88 07 87 06 10) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, மணிகண்டன் (98 40 34 66 31) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ரவி (96001190810) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நிவாரண முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Chief Minister M.K.Stal's inspection at the relief camp

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

இந்நிலையில் சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கேட்டறிவதோடு, ஆய்வு நடத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு, அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு உள்ளனர். வடசென்னை பகுதியான கண்ணப்பர் திடல் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வரை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சிந்தாதரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று  தமிழக முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்