Skip to main content

குடியே கதியான சப் கலெக்டர் மகன்... கடலூரை உலுக்கிய கொலை!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

கடலூரில் மதுகுடிக்க பணம் தராததால் ஓய்வுபெற்ற சப் கலெக்டர் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் அணைக்குப்பம் மீனாட்சி நகரில் வசிந்துவந்தார் துணை ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுப்பிரமணியன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே சுப்பிரமணியன் ஓய்வுபெற்ற நிலையில், சில  ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். சுப்பிரமணியனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்த நிலையில், பிள்ளைகளுக்குத் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டனர். கார்த்திக் என்ற மகன் மட்டும் வீட்டிலேயே தந்தை  சுப்பிரமணியனுடன் இருந்துள்ளார். 

 

பொறியியல் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு எதுவும் செல்லாமல் மதுவிற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (18.10.2021) காலை இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதன்பிறகு அன்று பிற்பகல் 3 மணியளவில் தந்தை இறந்துவிட்டதாக ப்ரீசர் பாக்ஸ் ஆர்டர் செய்துள்ளான் கார்த்திக். கார்த்திக்கின் வீட்டிற்கு ப்ரீசர் பாக்ஸ் கொண்டு சென்றவர்கள் உள்ளே சென்றதும் அதிர்ந்தனர். காரணம் உள்ளே  சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் மகன் கார்த்திக் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வீட்டின் ஒரு அறையில் மலைபோல காலி மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல் சிகரெட் பெட்டிகளும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. கார்த்திக் எந்த அளவிற்குக் குடிக்கு அடிமையானவர் என்பது அங்கு கிடந்த மதுபாட்டில்களால் ஊர்ஜிதமானது. மது பாட்டில்களுக்கு இடையே படுக்கை இருக்கும் அளவிற்கு குடிக்கு கார்த்திக் அடிமையானது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தந்தையின் பென்ஷன் பணத்தை வாங்கிக் குடித்துவந்ததாகவும், குடிக்கப் பணம் தராததால் இரும்பு கம்பியால் தாக்கி கைகளை உடைத்துக் கொன்றுவிட்டதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளான். குடியே கதியான சப் கலெக்டர் மகன், தந்தையைக் கொலை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.