Skip to main content

முறைகேடான கூடா உறவுகள்! -போக்சோ கைதுகள்!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

 

முறை தவறிய உறவுகளை சித்தரிக்கும் வீடியோக்களும் கதைகளும் படங்களும் இணையத்தில் மலிந்து கிடக்கின்றன. நம் சமூகத்தில் பலருக்கும் அவற்றை பார்க்கும், படிக்கும் பழக்கம் இருக்கிறது. அந்த வீடியோக்களைப் பார்த்த அத்தனை பேருமே, அதுபோன்ற தவறுகளைச் செய்துவருகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. தற்போது காவல்துறையின் நடவடிக்கைகளால் பெரும்பாலான ஆபாச தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சமூக விரோதிகள் புதுப்புது பெயர்களில் தளங்களை உருவாக்கி வருகின்றனர்.


இந்த ஆபாச வலைத்தளங்களெல்லாம் பின்னாளில் வந்தவை. முன்போ, புத்தக வடிவில் கடைகளில் மறைத்து வைத்து விற்று வந்தார்கள். எதற்காக இந்த ஆபாசக் குப்பைகளை இந்தக் கட்டுரையில் கிளற வேண்டியதிருக்கிறது என்றால், நிஜத்திலும் இதுபோன்ற கொடுமைகள் நடந்து வருவதால்தான். இந்த வாரத்தில் நடந்த இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்!

தஞ்சை மாவட்டம் – வல்லம்  போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வில்லிங்ஸ்டன் கிறிஸ்டோபர், தன் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த, மகள் முறையுள்ள 9 வயது சிறுமியை, பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

 

incident in viruthunagar


விருதுநகரில் நடந்ததோ, கொடுமையிலும் கொடுமை! மகேந்திரன் – தமிழ்செல்வி தம்பதியருக்கு குழந்தைகள் கிடையாது. அதனால், தமிழ்செல்வியின் அக்கா மகளான சுதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தத்தெடுத்து மகளாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், வளர்ப்பு தந்தையான மகேந்திரன், சிறுமி சுதாவிடம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருக்கிறார்.  

 

incident in viruthunagar


ஒன்றரை வருடங்களுக்கு முன், மகேந்திரன் நோய்வாய்ப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது சிறுமி சுதாவை, அவளது பெரியப்பாவான ராமபாண்டியின் வீட்டுக்கு கொண்டுபோய் விட்டனர். அங்கும் அண்ணன் முறையுள்ள காமராஜ் பெருமாள் என்ற மிருகம், தொடர்ந்து சுதாவை சீரழித்து வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், திரும்பவும் வளர்ப்பு தந்தை மகேந்திரனின் வீட்டுக்கு சுதா அழைத்து வரப்பட்டாள். அங்கு, அவள் பருவமடைந்து 15 நாட்களே ஆன நிலையில், அண்ணன் காமராஜ் பெருமாள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், இதை வெளியில்சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

இந்தச் சிறுவயதில், வளர்ப்பு தந்தையாலும், அண்ணன் முறையுள்ளவராலும், தொடர்ந்து பாதிப்புக்கு ஆளான சுதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அவள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை, மருத்துவர் அறிந்திருக்கிறார். மருத்துவமனை நிர்வாகம், காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறது. பிறகு, தமிழ்செல்வி, தன் கணவர் மகேந்திரன் மீதும், மகன் முறையுள்ள காமராஜ் பெருமாள் மீதும், விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போக்சோ சட்டத்தில் இருவரும் கைது கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

incident in viruthunagar


இத்தனைக்கும் காமராஜ் பெருமாளுக்கு மனைவி, குழந்தை என குடும்பம் இருக்கிறது. ஆனாலும், போக்கிரித்தனம் உள்ளவர்கள் என்பதாலோ என்னவோ, காமராஜ் பெருமாளின் நட்பு வட்டத்துக்கு ‘நரிக்கூட்டம்’ எனப் பெயர் வைத்துள்ளனர். காமராஜ் பெருமாள் மீதான கைது நடவடிக்கை, நரிக்கூட்டத்துக்கு கிலி ஏற்படுத்தியிருக்கிறது. “அவன் ஒருவன்தான் அப்படி; நாங்கள்லாம் நல்லவங்க..” என்று தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றனராம்.

 

incident in viruthunagar

 

Ad

 

நம் தமிழ்க்கலாச்சாரத்தில் - தாத்தா, பாட்டி,  அம்மா, அப்பா,  அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி,  அண்ணி, மச்சினி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், அத்தை, அத்தை பையன், மாமா பொண்ணு என உறவுமுறைகள் எத்தனையோ உண்டு. இவற்றை, உரிமை கலந்த பாசத்தோடு பேணிக் காப்பவர்கள் அனேகம் பேர்.

குடும்பமே கோவில்! உறவுமுறைகள் உன்னதமானவை!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.