Skip to main content

விராலிமலையில் பாலியல் குற்றத்தை மறைத்து வழிப்பறிக்கு மட்டும் வழக்கு- கேள்வி எழுப்பும் உறவினர்கள்

Published on 07/06/2020 | Edited on 07/06/2020
incident in viralimalai

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அடிக்கடி வழிப்பறி மற்றும் தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை பல கும்பல் வழக்கமாக வைத்திருக்கிறது. அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடந்து வருகிறது.


கடந்த மாதம் 25 ந் தேதி விராலிமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை  சேர்ந்த இரு குழந்தைகளுக்கு தாயான ஒரு இளம் பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் இயந்திர இயக்குநராக வேலை செய்துவிட்டு இரவு 11.30 க்கு கம்பெனி வாகனத்தில் ஊரின்  எல்லையில் மண் சாலையில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த 4 பேர் அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு, மூக்குத்தி, சங்கிலி உள்ளிட்ட தங்க நகைகளையும் பறித்துக் கொண்டு  சென்றுவிட்டனர்.  

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன் கணவருக்கு தகவல் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று  பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று வந்த விராலிமலை போலீசார் வழிப்பறக்கு மட்டும் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், ஹேமராஜ், நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இது குறித்து தகவல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறும் போது... பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். ஆனால் நகை பறித்துச் சென்றது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனை பாலியல் கொடுமை  நடந்துள்ளது என்று சான்றிதழ் அளித்தும் ஏனோ போலிசார் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

 

 


இதேபோல பல சம்பவங்கள் தொடர்ந்து மறைக்கப்படுகிறது. இதனால் குற்றவாளிகள் தொடர்ந்து தப்பி வருவதுடன் துணிச்சலுடன் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.  இது குறித்து மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நடவடிக்கை இல்லாத நிலையில் உறவினர்கள் திரண்டு காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது