Skip to main content

லாரி ஓட்டுநர் கடத்திக் கொலை... சிக்கிய அ.தி.மு.க. புள்ளியின் ஆள்காட்டி... உடலை வாங்க மறுத்து மனைவி போராட்டம்!!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
incident in tutucorine

 

தூத்துக்குடி மாவட்டத்தின் தட்டார்மடம் பகுதியின் சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த காலமான தனிஸ்லாசின் மகன் செல்வம் குடும்பத்தினருக்கும் அந்தப் பகுதியின் உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பான விவகாரம் வளர்ந்திருக்கிறது. இது குறித்து பலமுறை செல்வம், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் புகார் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர், திருமணவேலுவிற்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார். அவரிடம் புகாரை வாங்கி செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் மீதே வழக்குப் போட்டுச் சிறையிலடைத்திருக்கிறார்.

 

incident in tutucorine


இதனால் தனக்கு நியாயம் வேண்டி செல்வம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டிருக்கிறார். செப் 16 அன்று அதற்குப் பதில் மனு தாக்கல் செய்யும்படி இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணனுக்கு கோர்ட் நோட்டிபிகேஷன் போயிருக்கிறது. இதனிடையே கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த போது காரால் மோதிக் கீழே விழச்செய்து அவரைக் காரில் கடத்திச் சென்ற கும்பல் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொலைசெய்தது.

 

incident in tutucorine


திருமணவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரின் தூண்டுதலால் தனது மகன் கொலை செய்யப்பட்டார் என்று செல்வம் தாய் எலிசபெத் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொண்ட உயரதிகாரிகள், திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே 17ம் தேதியன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட செல்வத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்கவில்லை. திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும். கணவனைப் பறி கொடுத்த அவர் மனைவி செல்வஜீவிதாவிற்கு உரிய நிவாரணம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு இரண்டு நாளாகப் போராடி வருகின்றனர்.

 

incident in tutucorine


இந்த நிலையில் அடுத்த கட்டமாக சொக்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஆலயமணி அடிக்கப்பட்டு ஊரே திரண்டது. செல்வனின் மனைவி செல்வஜீவிதா மற்றும் கிராமத்தினர் அங்குள்ள தனிஸ்லாஸ் தேவாலயம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர். பனங்காட்டுப் படையின் மா.செ.வான ஓடை செல்வமும் உடன் இருந்தார்.

 

incident in tutucorine


தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் செல்வத்தின் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் கைது செய்யப்படவேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணமளிக்க வேண்டும் அதுவரை உடலைப் பெறமாட்டோம் என்றனர். அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முத்துராமலிங்கம், சின்னத்துரை ராமன் மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் முத்துராமலிங்கம் திருமணவேலின் மைத்துனர். சம்பவத்தில் ஆள்காட்டியாக செயல்பட்டவராம். அ.தி.மு.க. புள்ளியான இவர் புத்தன் தருவை கூட்டுறவு வாங்கித் தலைவர் பதவியிலிருப்பவர்.

உடல் பெறப்படாததால் உச்சப் பதற்றத்திலிருக்கிறது தட்டார்மடம் ஏரியா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.