Skip to main content

கரோனாவால் மருத்துவமனையில் மகன்... வீட்டு வாசலிலில் உயிரிழந்த தாய்... 4 மணி நேரமாகக் கண்டுகொள்ளாத நகராட்சி!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

incident in thiruthani

 

திருத்தணி அருகே மகன் கரோனாவிற்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வீட்டில் வயதான தாய் உயிரிழந்துள்ளார். உயிரிழந்து 4 மணிநேரமாகியும் அவரது உடலை எடுக்க யாரும் முன்வராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அங்காலம்மன் தெருவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி வீட்டு வாசலிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அவருக்கு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் இருந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்தார்.  இன்று காலையில் மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் திருத்தணி அரசு மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் வீடு கரோனாவிற்காக தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாது எனக்கூறிவிட்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து அவர் உயிரிழந்திருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக அவரது சடலத்தை எடுப்பதற்கு நகராட்சி நிர்வாகமோ அல்லது சுகாதாரத்துறையினரோ வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடமும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து புகார் தெரிவித்தும் கூட இறந்தவரின் சடலத்தை மீட்க அவர்கள் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவர, அவர் உத்தரவின் பெயரில் இறந்தவரின் உடலை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.