Skip to main content

அவமானமடைந்த ஆத்திரத்தில் நிகழ்ந்த கொலை-திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 29/11/2020 | Edited on 30/11/2020
incident in thiruchy

 

திருச்சியில் கடந்த 26.10.2020 அன்று ஆட்டோ ஓட்டுநரை வீட்டு வாசலில் வைத்து அவரது குடும்பத்தின் கண்முன்னரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி, திருவானைகோவில் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் முருகன். அதே பகுதியில் உள்ள பாரதி நகரை சோ்ந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் கறிக்கடை நடத்தி வருகின்றனா். ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு சொந்தமான ஆட்டை திருட வந்ததாக  குணசேகரன் மற்றும் மனைவி பரமேஸ்வரி இருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முருகன் ஸ்ரீரங்கம் காவல நிலையத்தில் அவா்கள் மீது புகார் கொடுத்தார். ஆடு திருட முயன்றதாக முருகன் கூறிய புகாரால் அவமானமும்,  ஆத்திரமும் அடைந்த பரமேஸ்வரி அவருடை மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி, மகன் மணிகண்டன் இருவரும் வெளியூரில் பணியாற்றி வரும் நிலையில், அவா்களை வரவழைத்து முருகனை கொலை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

 

இதனால் மணிகண்டனுடை கூட்டாளிகளான அருண்குமார்(17), ஹரிஹரன்(17, செல்வகுமார்(16), ராஜேஷ்(17), கண்ணன்(17), நரேஷ்(16) உள்ளிட்டவா்களுடன் முருகனுடைய வீட்டிற்கு சென்று முருகனை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து, அவருடைய குடும்பத்தின் கண்முன்னரே அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டனின் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். குணசேகரன், பரமேஸ்வரி அவரது மகள் முத்துலட்சுமி உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்த நிலையில், அவா்களைப் பிடிக்க திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. 

 

தேடுதலில், அவா்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருப்பதாக கிடைத்த தகலின் அடிப்படையில் 28.11.2020 அன்று அவர்களை கைது செய்தனர். அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பரமேஸ்வரியின் மருமகன் விக்னேஷ், குணசேகரனின் தம்பி முத்துக்குமார் உள்ளிட்டவா்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாகவும், மூளையாகவும் செயல்பட்ட பரமேஸ்வரியின் மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி மீது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.