Skip to main content

அவமானமடைந்த ஆத்திரத்தில் நிகழ்ந்த கொலை-திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 29/11/2020 | Edited on 30/11/2020
incident in thiruchy

 

திருச்சியில் கடந்த 26.10.2020 அன்று ஆட்டோ ஓட்டுநரை வீட்டு வாசலில் வைத்து அவரது குடும்பத்தின் கண்முன்னரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி, திருவானைகோவில் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் முருகன். அதே பகுதியில் உள்ள பாரதி நகரை சோ்ந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் கறிக்கடை நடத்தி வருகின்றனா். ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு சொந்தமான ஆட்டை திருட வந்ததாக  குணசேகரன் மற்றும் மனைவி பரமேஸ்வரி இருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முருகன் ஸ்ரீரங்கம் காவல நிலையத்தில் அவா்கள் மீது புகார் கொடுத்தார். ஆடு திருட முயன்றதாக முருகன் கூறிய புகாரால் அவமானமும்,  ஆத்திரமும் அடைந்த பரமேஸ்வரி அவருடை மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி, மகன் மணிகண்டன் இருவரும் வெளியூரில் பணியாற்றி வரும் நிலையில், அவா்களை வரவழைத்து முருகனை கொலை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

 

இதனால் மணிகண்டனுடை கூட்டாளிகளான அருண்குமார்(17), ஹரிஹரன்(17, செல்வகுமார்(16), ராஜேஷ்(17), கண்ணன்(17), நரேஷ்(16) உள்ளிட்டவா்களுடன் முருகனுடைய வீட்டிற்கு சென்று முருகனை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து, அவருடைய குடும்பத்தின் கண்முன்னரே அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டனின் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். குணசேகரன், பரமேஸ்வரி அவரது மகள் முத்துலட்சுமி உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்த நிலையில், அவா்களைப் பிடிக்க திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. 

 

தேடுதலில், அவா்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருப்பதாக கிடைத்த தகலின் அடிப்படையில் 28.11.2020 அன்று அவர்களை கைது செய்தனர். அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பரமேஸ்வரியின் மருமகன் விக்னேஷ், குணசேகரனின் தம்பி முத்துக்குமார் உள்ளிட்டவா்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாகவும், மூளையாகவும் செயல்பட்ட பரமேஸ்வரியின் மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி மீது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.