Skip to main content

கூலிப்படையால் லாரி டிரைவர் கடத்திக் கொலை... ஆய்வாளர், ஆளும் கட்சிப் புள்ளி மீது வழக்கு!!

Published on 18/09/2020 | Edited on 20/09/2020
INCIDENT IN THATTARMADAM

 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் சரகத்திற்குப்பட்ட சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த காலமான தனிஸ்லாஸ் என்பவரின் மகன் செல்வன். இவர்களின் குடும்பத்திற்கும் அந்தப் பகுதியின் அ.தி.மு.க. புள்ளியான திருமணவேல் என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக செல்வன் அவரது சகோதரன் பீட்டர் ராஜன் ஆகியோர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்னர். ஆனால் திருமணவேலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தட்டார்மடம் காவல் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லையாம். மாறாக திருமணவேலின் புகார் மீது நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் செல்வன் மற்றும் சகோரர்கள் மீது குற்ற எண் 177+ 179/2020படி வழக்குப் பதிவு செய்து கைது செய்தவர் அடித்துத் தாக்கி அவர்களைச் சிறையிலும் அடைத்திருக்கிறார்.

 

INCIDENT IN THATTARMADAM


இதனிடையே லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வரும் செல்வனை மூன்று முறை திருமணவேலின் தரப்புகள் தாக்கியதாகத் தெரிகிறது. அதனைப் புகார் செய்த செல்வத்தின் புகார் மீது இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்தே தனது புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் மீது நடவடிக்கைக்காக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார் செல்வம். அந்த மனு மீதான பதிலளிக்கும்படி நேற்றைய தினமான 16.09.2020க்கு அன்று இன்ஸ்பெக்டருக்கு தாக்கீது வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமாகியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன்.

இந்த நிலையில் நேற்று மதியம் சாத்தான்குளத்திற்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு தனது பைக்கில் திரும்பியிருக்கிறார் செல்வம். அவர் கொழுந்தட்டு விலக்கு பக்கம் வரும் சமயம் இன்னோவா கார் TN.69.K.8957ல் வந்த மர்ம நபர்கள் சிலர் செல்வத்தை வழி மறித்துக் கடத்திச் சென்றவர்கள் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக செல்வத்தைத் தாக்கியதாகத் தெரிகிறது. குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த செல்வத்தை அந்த கும்பல் கடக்குளம் பகுதியில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

 

INCIDENT IN THATTARMADAM


செல்வம் துடிப்பதைப் பார்த்த சிலர் அவரைக் சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுப் வழியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி.ஜெயக்குமார் விசாரணை மேற் கொண்டிருக்கிறார்.

 

INCIDENT IN THATTARMADAM


நடந்தவைகளை எல்லாம் தன் புகாரில் தெரிவித்த செல்வத்தின் தாய் எலிசபெத்,  திருமணவேல் அவருக்கு ஆதரவாரச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் தன் மகன் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு திசையன்விளை காவல் நிலையத்தில் பகார் செய்திருக்கிறார்.

அவர்கள் கொடுத்த புகாரின் படி திருமணவேல், மற்றும் இன்ஸ்பெக்டர் மீது எப்.ஐ.ஆர். ஆகியுள்ளது. அடுத்து விசாரணைக்குப் பின்பு நடவடிக்கை என்று நம்மிடம் தெரிவித்தார் நெல்லை சரக டி.ஐ.ஜி.யான பிரவீன்குமார்.

மேலும் இந்தக் கடத்தல் கொலை சம்பவத்தில் கூலிப்படையின் செயல்பாடுகளிருப்பதாகச் சந்தேகித்த போலீஸ் விசாரணை, அதன் ரூட்டிலும் செல்கிறது. முதலில் சாத்தான்குளம் போலீஸ் டார்ச்சர் அடுத்த தொற்றாக பக்கம் உள்ள தட்டார் மடம் டார்ச்சர் அம்பலமேறியுள்ளது.

 

INCIDENT IN THATTARMADAM

 

திசையன்விளை காவல் நிலையத்தின் முன்பு திருமணவேல், இன்ஸ் ஹரிகிருஷணன் இருவரையம் கைது செய்யும்படி செல்வம் மனைவி செல்வ ஜீவிதா மற்றும் நாம் தமிழ்ர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.