Skip to main content

வண்டியைக் கயிறு கட்டி இழுத்து இளைஞர்கள் போராட்டம்... பைக்கை பறிமுதல் செய்த போலீஸார்!

Published on 05/07/2020 | Edited on 08/07/2020

 

incident in sengam

 

உலகமே கரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு போயுள்ளது. நாட்டு மக்கள் தங்களிடம் பணமில்லாமல் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் தினந்தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேசிய அளவில் காங்கிரஸ், இடதுசாரிகள், மாநில கட்சிகள் எதிர்ப்புக் குரல் கொடுத்தும் மத்தியரசு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ், இடதுசாரிகள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஜூன் 4ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வால், வாகனத்துக்கு பெட்ரோல் போட முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இருசக்கர வாகனம் ஒன்றை இளைஞர்கள் கயிறு கட்டி இழுத்துச் செல்வது போல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை செங்கம் நகர போலீஸார் மறித்து தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுப்பட்ட 20 இளைஞர்களை கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தர்.

அந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், அதனை காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். வழக்கில் அந்த வாகனத்தையும் சேர்க்கவுள்ளனர் என்கின்றனர் காவல்துறை தரப்பில்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.