Skip to main content

விஸ்வரூபம் எடுக்கும் சேலம் சிறுமிகள் பாலியல் விவகாரம்: மேலும் ஒருவர் 'அத்துமீறிய' கொடூரம்!

Published on 21/11/2020 | Edited on 22/11/2020

 

incident in salem

 

பேய் ஓட்டுவதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை மந்திரவாதி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அச்சிறுமிகளை மாட்டுத்தீவன விற்பனையாளர் ஒருவரும் பல மாதங்களாகப் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 மற்றும் 12 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்ததால் அவர்கள் லேசாக மனநலம் பாதித்தவர்கள் போல் இருந்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தைச் சேர்ந்த மந்திரவாதி சேகர் என்பவரிடம், தாயத்து மந்திரித்து கட்டி வருவதற்காக, கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிகளைப் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அந்தச் சிறுமிகளுக்குப் பேய் பிடித்து இருப்பதாகவும், அவர்களுக்குச் சில நாட்கள், இரவில் பூஜைகள் செய்து பேய் ஓட்ட வேண்டியது இருக்கிறது என்றும் மந்திரவாதி கூறியுள்ளார். இதனால் சிறுமிகளை அங்கேய விட்டுச் சென்றுள்ளனர் பெற்றோர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அவர், சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களபுரம் காவல்துறையினர் சேகரை கைது செய்தனர். காவல்துறையின் தீவிர விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரையும் சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரும் பல மாதங்களாகவே பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதற்கிடையே அந்தச் சிறுமிகளின் பெற்றோர், சேலம் வீராணம் காவல் நிலையத்தில், சனிக்கிழமை (நவ. 21) ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வாழப்பாடியில் இருந்த எங்களை சேலம் சுக்கம்பட்டியில் மாட்டுத்தீவனம் விற்பனை செய்து வரும் ரவீந்திரன் என்பவர் வேலைக்காக அழைத்து வந்தார். எங்கள் மகள்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதாகவும், அதனால் குடும்பத்துடன் சுக்கம்பட்டியில் தங்கியிருந்து வேலை செய்யும்படியும் கூறினார். அதன்பேரில் நாங்கள் குடும்பத்துடன் சுக்கம்பட்டிக்கு வந்தோம்.

அவர் கூறியபடியே எங்கள் மகள்களை அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்த்தார். இந்த நிலையில், கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், கடந்த 8 மாதங்களாக ரவீந்திரன் தன்னுடைய வீட்டு வேலைகளைச் செய்வதற்காக எங்கள் மகள்களை அழைத்துக் கொண்டார். அப்போது அவர், எங்கள் குழந்தைகளைப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் எங்கள் மகள்கள் கர்ப்பம் அடைந்துள்ளனர். கருவைக் கலைப்பதற்காகவும் அவர் மாத்திரைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

 

cnc


இந்த நிலையில், நாங்கள் மீண்டும் சொந்த ஊருக்கே செல்ல முடிவு செய்தோம். அப்போது ரவீந்திரன், சமையல் வேலைகள் செய்வதற்கு ஆள் தேவை என்று கூறி எங்கள் இரண்டாவது மகளை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். அப்போதும் அவர் எங்கள் மகளிடம் பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை விசாரித்துக் கைது செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது. மகள்களைப் பெற்ற பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.