Skip to main content

'டாஸ்மாக் தான் முக்கியம், குடும்பம் முக்கியமல்ல' -போராட்டத்துக்கு எதிர்போராட்டம் நடத்திய 'குடிமகன்கள்'

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு ராபிக் நகர் பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடையை அப்பகுதியில் சமீபத்தில் புதியதாய் அமைத்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் பெண்கள் இந்த பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரிக்கு போய்விட்டு வரும் பெண் பிள்ளைகளையும் குடிகார கும்பல் கிண்டல் செய்கிறது என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு தந்துள்ளனர்.

 

INCIDENT IN RANIPETTAI....

 

மதுக்கடை வரப்போகிறது என தெரிந்தபோதே, இது குடியிருப்பு பகுதி இங்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து செயலாளர் போன்றோர் ஒப்புதல் கடிதம் வழங்க, தனிநபரின் இடத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு அரசின் டாஸ்மாக் நிர்வாகம் கடையை திறந்துவிட்டது.

இந்நிலையில் குடிக்காரர்கள் தொல்லை அதிகரித்ததால் பிப்ரவரி 16ந்தேதி மாலை அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு கடை முன் வந்து நின்று கடையை மூடு என்று கோஷமிட்டனர். பின்னர் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். கடை ஊழியர்கள் டாஸ்மாக் கடையை மூடிவிட்டனர்.

 

INCIDENT IN RANIPETTAI....


அதேநேரத்தில் அதேபகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் இந்த மதுபானக்கடையை அகற்றகூடாது, இந்த கடை இங்கயில்லை என்றால் நாங்கள் தூரமா போய் தான் சரக்கு வாங்கனும் எனச்சொல்லி ஒரு கும்பல் போராட்டத்தில் ஈடுப்பட்டது. இது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது. எங்களுக்காக மட்டும்மில்லை, உங்க வீட்டு பெண்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் தான் நாங்கள் போராடுகிறோம் எனச்சொல்ல, அதெல்லாம் நீங்க பேசக்கூடாது, கடையை மூடச்சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கறமாதிரி, திறக்கனும்ன்னு சொல்றதுக்கும் எங்களுக்கு உரிமையிருக்கு எனச்சொல்லி விதன்டாவாதம் செய்ய பொதுமக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

 

INCIDENT IN RANIPETTAI....

 

இந்த தகவல் தெரிந்து வாலாஜா போலீஸார் சம்பவயிடத்துக்கு வந்து இருதரப்பையும் போராட்டத்தை கைவிட செய்து மனுவா தாங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கச்சொல்றோம் எனச்சொல்லியுள்ளனர். கடையை மூடச்சொன்ன பொதுமக்கள் காவல்துறையினரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதில் கோபமான போலீஸார், எங்களையே கேள்வி கேட்கறிங்களா என போராட்டம் செய்த பொதுமக்களை இழுத்து வண்டியில் ஏற்ற முயன்றனர். இதனால் பிரச்சனை பெரியதானது.

கடையை மூடக்கூடாது எனச் சொன்னவர்களை எதுவும் சொல்லவில்லை போலீஸ். தங்கள் குடும்பத்தை பற்றி கவலையில்லை, எங்களுக்கு டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கூடாது என போராடியது பலரை அதிர்ச்சியடைய செய்தது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.