Skip to main content

10 மாதமாகச் சம்பளம் இல்லை... மனஉளைச்சலில் ஊராட்சி செயலர் விஷம் குடித்துத் தற்கொலை!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

incident in pudukottai thiruvarangluam

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் மாங்காடு கிராத்தைச் சேர்ந்தவர் முழுகேசன். இவருக்கு மனைவி மற்றும் 5, 3 வயதுகளில் ஆண் குழந்தைகள் உள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு ஊராட்சி செயலராகப் பணியில் சேர்ந்தார். அரயப்பட்டி ஊராட்சியில் சில வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்தபோது இடமாறுதல் கிடைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்று சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டார்.

அதன் பிறகு புளிச்சங்காடு அண்ணாநகர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கொண்டு பள்ளத்திவிடுதி ஊராட்சி செயலராகத் தற்போது வரை பணியாற்றி வந்தார். அங்கு ஊராட்சிக்கு ரூ.8 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டியுள்ளது. அந்தப் பணம் அலுவலகத்தில் செலுத்தப்படாத நிலையில் அவருக்குக் கடந்த 10 மாதங்களாகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு செலவுக்கே வழியின்றி தவித்து வருவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்கள் வாட்ஸ் அப் குழுவில் வேதனையைப் பகிர்ந்துள்ளார். சம்பளம் இல்லாததால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் கடந்த ஒரு மாதமாக ஊராட்சி வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

 

incident in pudukottai thiruvarangluam


இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்குச் சென்றவர் மதியம் ஒரு படம் மற்றும் பதிவு ஒன்றை நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியவில்லை. வீட்டுச் செலவுகளையும் சமாளிக்க முடியவில்லை. அதனால் கடும் மனஉளைச்சலில் இருப்பதால் மதுவில் விஷம் கலந்து குடிக்க போகிறேன் என்று பதிவிட்டு மதுவில் விஷம் கலந்த படத்தையும் அனுப்பிவிட்டு செல்ஃபோனை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டார். அந்தப் பதிவைப் பார்த்த நண்பர்கள் அவரை நீண்டநேரம் தேடி சிகிச்சைக்காக தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சம்பளம் இல்லை என்ற மனஉளைச்சலில் இருந்து குடும்பதைக் காப்பாற்ற முடியவில்லை என்ற விரக்த்தியி்ல மதுவில் விஷம் கலந்துத் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி செயலர் முருகேசன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.