Skip to main content

கரோனாவால் இறந்தவரின் சடலம் மாறியது எப்படி? -மருத்துவமனை அலட்சியத்தால் நிகழ்ந்த அவலம்!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020

 

incident in puducherry


புதுச்சேரி முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் காவலராகப் பணி புரிந்து வருபவர் ஞானசேகர். இவரது 70 வயது தாய் நேற்று முன்தினம்  (17.08.2020) திடீரென வீட்டிலேயே உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக உடல் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனையில், இறந்த அவரது தாயாருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அதையடுத்து நேற்று (18.08.2020) தாயின் உடலை அடக்கம் செய்ய சிபாரிசின் அடிப்படையில் கேட்டு இருந்தார். உடல் ஆம்புலன்ஸ் மூலம் தேங்காய்த் திட்டு இடுகாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, சடங்குகள் செய்து எரியூட்டப்பட்டது.

இதனிடையே புதுச்சேரி வில்லியனூர் மணவெளி திரிவேணி நகரில் வசிக்கும் யோகானந்த் என்பவரது மனைவி குணவள்ளி(43) மூச்சு இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 16.08.2020 அன்று இவருக்கு மூச்சு இரைப்பு அதிகமானதால்  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் அளித்த யோகானந்த் தனது மனைவியை கதிர்காமம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியதுடன் கரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டு பிணத்தைப் பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் மர்மமான முறையில் இறந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்த குணவள்ளிக்கு கரோனா தொற்று  இல்லை என  முடிவு வெளியான தகவல் வந்ததையடுத்து பிணத்தை எடுத்துச் செல்வதற்காக நேற்று யோகானந்த் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் உடன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். பிணவறைக்குச் சென்று பார்த்தபோது குனவள்ளியின் உடல் காணவில்லை. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடலை தேடினர். இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு புகார் தெரிவித்தனர்

கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைத்த உடலை சவக்கிடங்கில் மாற்றி எடுத்துக் கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் போலீஸ்காரர் தாயாருக்கு பதிலாக குணவள்ளியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. இதில் குறிப்பிட வேண்டிய செய்தி குணவள்ளிக்கு கரோனா தொற்று இல்லை. போலீஸ்காரரின் தாயாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

தாயின் உடல் என நினைத்து அந்த போலீஸ்காரரும் இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளார். மேலும் குறிப்பிட வேண்டிய செய்தி இறந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் வெவ்வேறு சடங்கு முறை இருக்கும்.

 

http://onelink.to/nknapp


விவகாரம் சிக்கலானதையடுத்து குணவள்ளியின் கணவரிடம் முதலமைச்சர் நாராயணசாமி பேசி 'தவறு நடந்து விட்டது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் மருத்துவமனை சார்பில் எரியூட்டப்பட்ட குனவள்ளியின் அஸ்தி அவரது கணவரிடம் வழங்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் போலீஸ்காரரின் தாயார் உடலை எடுத்துச்சென்று எரியூட்டினர்.

புதுச்சேரியில் கவனக்குறைவால் சடலங்கள் மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.