Skip to main content

நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் கோரக் கொலை- அதிரவைக்கும் பின்னணிகள்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரிப் பக்கம் உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மூன்று மகன்களில் ஒருவர் நம்பிராஜன் (21) நம்பிராஜன் உட்பட குடும்பமே கூலித் தொழிலில் உள்ளது. அதில் நம்பிராஜன் அடுத்த தெருவிலுள்ள கூலித் தொழிலாளியான தங்கப்பாண்டி என்பவரின் மகளான வான்மதியோடு (18) பழகியதில் அதில் நெருக்கமான காதலனார்கள். இரண்டு குடும்பங்களும் ஓரே சமூகம், ஓரே ரேஞ்ச்சில் இருப்பவை. அதே சமயம் நம்பிராஜன் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமியும் நண்பர்கள். இருவருமே விவகாரத்தில் தாட்டியமானவர்கள். அதில் நம்பிராஜன் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள். போலீசின் ஆவணப்படி அவர் பெயர் ரவுடிப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

 

incident


ஒரே சமூகம் என்பதால் நம்பிராஜனின் குடும்பத்தார்கள் அவனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆதரவு கொடுத்தனர். அதே சமயம் வான்மதியின் தந்தை தங்கப்பாண்டி எதிர்த்திருக்கிறார். விவகாரத்தை நாங்குநேரிக் காவல் நிலையம் வரை கொண்டு செல்ல, காதலர்களை விசாரித்த போலீசாரிடம், தான் விருப்பப்பட்டே நம்பிராஜனைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் முடிக்கப் போவதாக சொல்ல, மனமொத்த காதலர்கள் என்பதால் போலீசார் சட்டபடி புகார் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் காதலர்கள் திடீரென்று ஊரை விட்டுத் தலைமறைவானார்கள். மேலும் வான்மதிக்கு 18 வயது ஆகவில்லை. அவர் மைனர். சட்டப்படி திருமணம் செய்ய இயலாது என்பதால் நம்பிராஜன் தன் காதலி வான்மதியைத் தலைமறைவாக வேறு ஊரில் தங்க வைத்து  அவருக்கு நான்கே மாதத்தில் 18 வயது ஆனதும், அவரை முறைப்படி திருமணம் செய்து நெல்லை டவுனில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்தோடு தங்கி வாழ்க்கையை நகர்த்தியுள்ளனர்.

இதனிடையே வான்மதியின் அண்ணன் செல்லச்சாமியும் மாஞ்சாங்குளத்திலுள்ள தனது சமூகத்தைச் சார்ந்த பெண்ணைக் காதலித்து எதிர்ப்பையும் மீறி அவரை திருமணம் செய்தவர். இந்தச் சூழலில் நாங்குநேரியில் உள்ள துக்க வீட்டிற்கு வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி தன் நண்பர்களுடன் வந்திருக்கிறார். அது சமயம் அவர்களனைவரும் செம போதையிலிருக்கிறார்கள். அந்நேரம் பார்த்து சக நண்பர்கள்.

 

incident in nellai.. police investigation

 

உன் தங்கை காதலித்து ஓடிப்போனவர் என்று சகாக்கள் செல்லச்சாமியை உசுப்பேற்றியிருக்கிறார்கள். இதனால் செல்லச்சாமி ரௌத்திரமாகியிருக்கிறார். மப்புக் குறையாமல் அதே சூட்டில் நண்பர்களோடு திட்டம் போட்டிருக்கிறார். ப்ளான் படி நேற்று முன் தினம் இரவு டவுணில் உள்ள நம்பிராஜனின் வீட்டிற்கு வந்த அவனது நண்பன் முத்துப்பாண்டி அவரை மதுக் குடிக்க அழைத்திருக்கிறார். அவனை தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு முத்துப்பாண்டி, குறுக்குத்துறை ரயில்வே கேட் பக்கம் அழைத்துச் சென்றார் . அங்கே நண்பர்கள் மது அருந்திய நேரத்தில், புதரில் மறைந்திருந்த கும்பல் ஒன்று நொடியில் நம்பிராஜனைச் சூழ்ந்து கொண்டு வெறித்தனமாக வெட்டியது. நம்பிராஜனின் தலையைத் துண்டாக்கியது. நம்பிராஜனின் உடலை இழுத்துச் சென்று ரயில்வே டிராக்கில் போட்டு, ரயில் மோதி இறந்துவிட்டடதாக செட்டப் செய்து விட்டு மறைந்திருக்கிறது அந்தக் கும்பல்.

 

incident in nellai.. police investigation


இதனிடையே தன் கணவன் இரவாகியும், வீடு திரும்பாததைக் கண்டு பதறிய வான்மதி டவுண் போலீசில் புகார் செய்திருக்கிறார். அதோடு தனது திருமணம் நடந்தது உள்ளிட்ட விபரங்களை வான்மதி போலீசாரிடம் தெரிவிக்க விசாரணையின் மூலம் ரயில்வே டிராக்கில் கிடந்த நம்பிராஜனின் உடலைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஸ்பாட்டிற்கு வந்த நெல்லை மாநகர டி.சி.சரவணன் முழு விசாரணையை மேற் கொண்டிருக்கிறார் அதனடிப்படையில் 5 பேரைக் கைது செய்திருக்கிறார்.

வேண்டாத வெறித்தனத்தில் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். செல்லச்சாமி உள்பட அவனுடன் ஐந்து பேரைக் கைது செய்திருக்கிறோம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று நம்மிடம் சொன்னார் டி.சி.சரவணன்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.