Skip to main content

போலீஸ் இன்ஃபார்மர் வெட்டிக் கொலை... ஒரினச்சேர்க்கை கும்பலின் வெறிச்செயல்!

Published on 25/10/2020 | Edited on 25/10/2020
incident in nellai

 

நெல்லை தாலுகாவிற்குட்பட்ட பாளை நகரின் சமீபம் உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் பரமசிவன் (45) கூலித் தொழிலாளியான இவர் அந்தப் பகுதியில் நடக்கிற சட்ட விரோத செயல்கள் மணல் கடத்தல் கஞ்சா புள்ளிகள் பற்றிய தகவலைப் போலீசாருக்குத் தெரிவிக்கும் ஆள்காட்டியான இன்ஃபார்மராகச் செயல்பட்டிருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு பரமசிவன் தன் வீட்டுக்குப் பின்புறம் வெளியே கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறார். அதிகாலை வேளையில் ஒரு கும்பல் அவரது தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுச் சிதைத்தும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியிருக்கிறது. அவரின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பார்வதியும் மகனும் வந்து பார்த்த போது முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது. தகவல் அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த தாழையூத்து டி.எஸ்.பி. அர்ச்சனா தாலுகா இன்ஸ்பெக்டர் சாந்தி உள்ளிட்ட போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தவர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரமசிவன் போலீசாரின் இன்ஃபர்மராகச் செயல்பட்டதுடன், சட்டவிரோதப் புள்ளிகளில் விபரங்களையும் தெரிவித்து வந்திருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி உள்ளிட்ட இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது   தெரியவந்திருக்கிறது. பாண்டி தன்னுடைய பேஸ்புக்கில் ஒரினச்சேர்க்கையாளர்களுக்கென்று ஒரு ஆஃப் வைத்திருக்கிறானாம். அதன் மூலம் ஒரினச்சேர்க்கையாளர்களை ஒருங்கிணைத்து அவர்களைக் கொண்டு மிரட்டி, கஞ்சா விற்பனை மற்றும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டதைப் போலீசாருக்குத் தகவல் சொல்லியுள்ளாராம். அதன் விளைவே இந்தக் கோரக் கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக நடுவக்குறிச்சியைச் சேர்ந்த பாண்டி (22) அவரது உறவினர் சுரேஷ் (22) இருவரையும் பாளை தாலுகா போலீசார் கைது செய்ததுடன் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.