Skip to main content

பட்டப்பகலில் நாங்குநேரியில் இரட்டைக் கொலை... தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

incident in nanguneri... police investigation

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் மருகால்குறிச்சியில் ஏற்பட்ட காதல் விவகாரம் காரணமாக ஒரு வருடங்களுக்குள்ளாக பழிக்குப் பழியாக இரண்டு தரப்பிலுமாக 5 பேர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாங்குநேரியில், தொடர் சம்பவமாகியிருக்கிறது பழிக்குப் பழி படுகொலைகள்.

இன்று காலை மருகால்குறிச்சியின் சண்முகத்தாய் அருகிலுள்ள தனது உறவினரின் வீட்டிலிருக்க, அடுத்த வீட்டிலிருக்கும் சாந்தி அவருடைய வீட்டிலிருந்திருக்கிறார். காலை 12 மணியளவில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சாந்தியின் வீட்டுக்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு அரிவாளால் வெட்டி சாந்தியைப் படுகொலை செய்திருக்கிறது. இதில் சாந்தியின் தலை தொங்கியிருக்கிறது. அடுத்து அந்தக் கும்பல் வேறு ஒருவரைத் தேட, சம்பவமறிந்து பதறிப்போன சண்முகத்தாய் தன் வீட்டிலிருந்து தப்பிய போது அந்தக் கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி வெட்டியதில் அவரின் தலை துண்டானது. பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே சடலமானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி உடல்களைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை எஸ்.பி.யான மணிவண்ணன் விசாரணையை மேற்கொண்டதோடு குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான தேடுதலைத் தீவிரப் படுத்தியிருக்கிறார்.

போலீசாரின் விசாரணையில், இந்தப் படுகொலைகள் பழிக்குப்பழியாக நடந்தவைகள். கடந்த 2019-ல் மருகால்குறிச்சியின் நம்பிராஜன் என்ற வாலிபர் அடுத்த தெருவிலிருக்கும் தனது சமூகத்தைச் சேர்ந்த வான்மதி என்பவரைக் காதலித்து அவருடன் நெல்லை டவுண் பகுதியில் அடைக்கலமாகியிருக்கிறார். இதில் பெண் வீட்டார் ஆத்திரத்தில் எதிர்த்தனர். மைனர் பெண்ணான வான்மதிக்கு இரண்டு மாதம் முடிந்து 18 வயதானதும், அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார் நம்பிராஜன். இதனால் ஆத்திரமான வான்மதியின் சகோதரன் செல்லச்சாமியும் அவரது தரப்புகளும் 2019 நவம்பரில் நம்பிராஜனை கடத்திச்சென்று நெல்லை டவுண் பகுதியிலேயே படுகொலை செய்திருக்கிறது.

இதனால் நம்பிராஜனின் தந்தை அருணாசலத்தின் தரப்புகள் செல்லச்சாமியைப் பழிவாங்கக் காத்திருந்தது.

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த செல்லச்சாமியைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்த அருணாச்சலம் தரப்புகள், கடந்த மார்ச் மாதம் அவர்கள் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து வெட்டியதில் ஆறுமுகம், சுரேஷ் இருவர் பலியாக மற்றவர்கள் தப்பியிருக்கிறார்கள். இதில் பலியான சுரேஷ் என்ற வாலிபர் அந்த ஹோட்டலின் வேலையாள். ஆள் மாறாட்டம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

 

incident in nanguneri... police investigation


இதில் நம்பிராஜனின் தந்தை அருணாச்சலம், தாய் சண்முகத்தாய் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களனைவரும் அண்மையில் தான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள். இவர்களைப் பழிக்குப் பழியாகப் போட்டுத்தள்ள முயற்சிப்பதையறிந்த உளவுப் பிரிவும், போலீசும் அவர்களை எச்சரித்ததோடு. இங்கே வரவேண்டாம் வேறு எங்கேயாவது போய்விடுங்கள். எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. அதே சமயம் எஸ்.பி.யான மணிவண்ணனும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் இதையும் மீறி இன்று காலை இரண்டு பெண்களையும் வெட்டி கொலை செய்திருக்கிறது அந்தக் கும்பல். விசாரணைப் போலீசார், இந்தப் படுகொலைகள் பழிக்குப்பழியாகத்தான் தெரிகிறது. 12 பேர்களடங்கிய கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார்.

 

Ad

 

எச்சரிக்கைத் தகவலால் ஆண்கள் அலர்ட் ஆகித் தப்பிவிட ஹோட்டல் கொலையில் குற்றவாளியான சண்முகத்தாய் மற்றொரு குற்றவாளியான இசக்கியின் தாய் சாந்தி இருவரையும் குறிவைத்து அடித்திருக்கிறது. அதே சமயம் கும்பல் புகுந்த போது அருணாச்சலமும், அவர் மனைவி சண்முகத்தாயும் பின்புறமாகத் தப்பியதில் சண்முகத்தாய் சிக்கிக் கொள்ள நொடியில் அருணாச்சலம் தப்பியிருக்கிறார்.

உயிருக்கு உயிர், ரத்தத்திற்கு ரத்தம். ஃபார்மூலாக்கள் ஓய்வதில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.