Skip to main content

ஆட்சியரகத்தில் நடந்த பொங்கல் விழாவில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்; நாகை பரபரப்பு

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

incident in nagai

 

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் பொங்கல் விழா கொண்டாடிக்கொண்டிருந்த அரசு அதிகாரிகள் மத்தியில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

 

கோவை மாவட்டம் பீளமேடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் பட்டதாரிப் பெண் அனுசுயா. அவருக்கும், விருதுநகர் மாவட்டம் பிச்சப்பத்தி மாங்குளம், வடக்கு வீதியைச் சேர்ந்த மாரிச்செல்வத்திற்கும் இடையே முகநூல் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்திற்காக பெண் வீட்டாரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணமும், ராயல் என்ஃபீல்ட் பைக்கும், 5 பவுன் தங்க நகைகளையும் டவுரியாக வாங்கியிருக்கிறார் மாரிசெல்வம்.

 

இதற்கிடையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி என்கிற பெண்ணை ஷேர் சாட் மூலம் காதல்வயப்படுத்தி, அந்த பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு சொகுசு வாழ்க்கையில் இருக்கிறார் மாரிச்செல்வம்.

 

இதையறிந்து பதறிப்போன பட்டதாரிப் பெண்ணான அனுசுயா தன்னை ஏமாற்றிவிட்டு மறுமணம் செய்த மாரிச்செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களிடமிருந்து  டவுரியாக பெற்ற பணம் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

incident in nagai

 

இந்த புகாருக்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காமல் அலைகழிக்க விட்டதால் விரக்தியான பாதிக்கப்பட்ட பட்டதாரிப் பெண் அனுசுயா தனது பெற்றோர்களுடன் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தலையில் மண்ணெண்ணெய் ஊற்றியபடியே தீக்குளிக்க முயற்சித்தார். அதே நேரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அதிகாரிகள் கூடிநின்று பொங்கல் விழாவை கொண்டாடிக்கொண்டிருந்தனர், அந்த நேரத்தில் அனுசியா தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

incident in nagai

 

இதையடுத்து பெண்ணின் கையில் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை மாவட்ட ஆட்சியரக ஊழியர் செந்தில் என்பவர் பறித்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து அங்கு வந்த நாகூர் போலீசாரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அனுசியாவிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

 

incident in nagai

 

இதுகுறித்து அனுசியா கூறுகையில், "எனக்கு இழைத்த கொடுமை, இனி எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது, அவனுக்காக பல அவமானங்களை சந்திச்சிட்டேன். பல இடங்களில் கடன்வாங்கி கொடுத்துவிட்டேன். எனது வாழ்க்கையை பாழாக்கிவிட்டான். அடுத்தவர்களிடம் அவனுக்கு வாங்கிக்கொடுத்த பணத்தையாவது எனக்கு பெற்றுதரவேண்டும். அவன் இனி யாரையும் ஏமாற்றாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.