Skip to main content

குமாரபாளையத்தில் தி.மு.க நிர்வாகி படுகொலை..!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

incident in kumarapalaiyam

 

நாமக்கல் குமாரபாளையத்தில், தி.மு.க வார்டு செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அந்தப் பகுதியின் (தி.மு.க.வின்) வார்டு செயலாளர். இவர் கடந்த 20-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனது நண்பர்களுடன், காவேரி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடையில் பேசிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞன் டூவீலரில் வந்து வேகமாக இறங்கியதோடு, திடுதிப்பென சரவணனை கீழே தள்ளிவிட்டு சரவணன் மீது அமர்ந்து, தனது கையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாகக் குத்தினார்.

 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சரவணனுடைய நண்பர்கள், அந்தத் தாக்குதல் நடத்திய பிரகாஷை தடுத்தனர். அப்பொழுது சரவணனின் நண்பர்கள் பிரபாகரன், முரளிதரன் ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து பிரகாஷ் தப்பி ஒடிவிட்டார். அதிக கத்திக்குத்து காரணமாக சம்பவ இடத்திலேயே சரவணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சரவணனின் நண்பர்களான முரளிதரன், பிரபாகரன் ஆகியோரை, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். 

 

incident in kumarapalaiyam

 

இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் அங்கு வந்து கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், சரவணனுக்கும் கொலையாளி பிரகாஷுக்கும் ஒரு கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த சரவணன் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதி திமுகவின் செயலாளராக உள்ளார். சரவணனை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்ற பிரகாஷை போலீசார் வலைவீசித் தேடிவந்தனர். குமாரபாளையத்திலிருந்து (சேலம்) எடப்பாடி செல்லும் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையே கொலையாளி பிரகாஷும் அவனது நண்பனான கோவிந்தராஜூம் 21 ஆம் தேதி மாலை சங்ககிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிறகு அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.