Skip to main content

திடீர் தீயில் சாம்பலான 77 கடைகள்... மின் கசிவா? திட்டமிட்ட சதியா? 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

 

 

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமாியில் கரோனா ஊரடங்கிற்கு முன்தினம் கூட வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். அதன்பிறகு கரோனா தாக்கம் அதிகரித்ததால் கன்னியாகுமரி சுற்றுலாத்தலம் முடங்கியது. இதனால் அங்கு கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவந்த வியாபாரிகள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் முதலீடு செய்து பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்த வியாபாரிகள், நஷ்டத்தில் தள்ளப்பட்டதோடு, வட்டிக் கடன்களும் அவர்களைத் துரத்தியது.

 

இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலாத் தலங்கள் செயல்படத் தொடங்கியதும் கன்னியாகுமாியிலும் சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கினார்கள். இதனால் வியாபாரிகளும் கடைகளைத் திறந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இருந்தாலும் முன்பைப் போல் வியாபாரம் இல்லாமல் தவித்தனர். இதனால் கடைகளில் பொருட்களும் நிரம்பியே இருந்தன. இந்நிலையில், இன்று (9-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கடற்கரையையொட்டி காந்திமண்டபம் அருகில் இருந்த 74 நிரந்தரக் கடைகள் மற்றும் 3 தற்காலிகக் கடைகளில் திடீரென்று தீப்பிடித்தது.

 

ஒரு கடையில் பிடித்த தீ, மளமளவென்று காட்டுத்தீ போல் வேகமாக மற்ற கடைகளிலும் பரவியது. கொஞ்ச நேரத்தில் அந்தப்பகுதி புகை மண்டலமாக மாறியது. கடைகளில் இருந்த துணிகள், அலங்காரப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், ஃபேன்சி பொருட்கள், பாசி மாலைகள், செருப்புகள் எரிந்து கரிக்கட்டைகளானது. இவற்றின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைத்தனர். அதற்குள் 74 கடைகளும் எரிந்து தரைமட்டமானது.

 

கடைகள் இருந்த இடம் தேவசம்போர்டுக்கு சொந்தமான இடம் என்பதால் வருமானத்துக்கு வேண்டி அங்கு கடைகள் கட்ட அனுமதித்தனர். இதனால் காந்திமண்டபம் அருகில் இருந்து கடல் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் அந்த பகுதியில் இவ்வளவு கடைகள் அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் எதிர்ப்புக் காட்டி வந்தனர். மேலும் அந்த வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் பெரும் இடையூறாகவும் இருந்து வந்தது.

 

இதனால் திடீரென்று அந்த கடைகள் எப்படித் தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவால் தீப்பிடித்ததா? அல்லது திட்டமிட்ட சதியால் நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு உடனே நோில் சென்ற கலெக்டர் அரவிந்த், எஸ்.பி பத்ரி நாராயண், ஆா்.டி.ஒ. மயில் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.