Skip to main content

பட்டப்பகலில் கடைவீதியில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவன் கைது!

Published on 28/06/2020 | Edited on 29/06/2020

 

incident in kallakurichy

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மணலூர்பேட்டை. இங்குள்ள பேக்கரி கடையில் வேலை செய்த மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். வயது 45 இவரது மனைவி விஜயா வயது 37 இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விஜயா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று வீட்டு வேலை செய்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஊருக்குத் திரும்பியுள்ளார். இதன் பிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

kallakurichi

 

மனைவி விஜயா மீது சரவணன் சந்தேகமடைந்துள்ளார் எனவே இருவருக்கும் அடிக்கடி முட்டல் மோதல் ஏற்பட இதனால் இருவரும் பிரிந்து  தனித்தனியாக வசித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு விஜயா தன் தாயாருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மணலூர்பேட்டையில் உள்ள  ஒரு பேக்கரி கடைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

 

இந்த நிலையில் சரவணன் அடிக்கடி வந்து மனைவி விஜயாவை சேர்ந்து வாழ்வதற்கு தன்னோடு வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் கணவருடன் செல்ல விஜயா மறுத்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணன் நேற்று முன்தினம் மணலூர்பேட்டையில் விஜயா வேலைசெய்த பேக்கரி கடைக்குச் சென்று தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். அப்போதும் விஜயா மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணன் கையில் தயாராக வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயாவின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துள்ளார்.

 

incident in kallakurichy


இதனைப் பார்த்த பொதுமக்கள் பயந்து மிரண்டு ஓடியுள்ளனர். தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய  விஜயாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் தானே உளுந்தூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் எனது மனைவி விஜயா  வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய பிறகு அவர் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்த நிலையில் சேர்ந்து வாழ வருமாறு விஜயாவை அழைத்தபோது வர முடியாது என்று மறுத்து வந்தார். இந்த கோபத்தினால் அவரை கத்தியால் குத்தினேன் என்று சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இதையடுத்து  போலீசார் சரவணனை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு நீதிமன்றம் மூலம் அவரை சிறையில் அடைத்துள்ளனர். விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்தச் சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.