Skip to main content

காதலியை தனிமையில் சந்திக்க காதலன் போட்ட பெட்ரோல் குண்டு- விசாரணையில் அதிர்ச்சி!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் காதலியை தனிமையில் சந்திக்க காதலன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை அடுத்த அய்யம்பாளையம் பொட்டல் குடியிருப்பு பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடிவந்த நிலையில் தகவலறிந்து வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை  அணைத்தனர். இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த திடீர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சந்தேகப்படும்படி ஒரு இளைஞர் இருவர் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் இருந்த நபரான ராஜாங்கத்தை போலீசார் கைதுசெய்தனர். அந்த நபர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்  என்பதும், கொத்தனார் வேலை செய்து வருபவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ராஜங்கத்திடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தது.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

அதே அழகர் பொட்டல் குடியிருப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராஜாங்கம் காதலித்து வந்ததாகவும், அவரை சந்திக்க சென்றால் அப்பகுதி மக்கள் ஏதேனும் கேள்வி எழுப்புவார்கள் என பயம் கொண்ட ராஜாங்கம் அப்பகுதி மக்களை திசை திருப்பி தன் காதலியை சந்திக்க அந்த பகுதியில் உள்ள மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அவர் திட்டமிட்டபடியே திடீரென ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் ஒன்றுகூட ராஜாங்கம் அவரது காதலியை தனிமையில் சந்தித்துள்ளார்.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

இளைஞர் ஏற்படுத்திய இந்த விபத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றாலும் காதலியை இடையூறின்றி சந்திக்க பெட்ரோல் குண்டு வீசி தீவிபத்தை ஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்த போலீசார் ராஜாங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

   

சார்ந்த செய்திகள்

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.