Skip to main content

காதலியை தனிமையில் சந்திக்க காதலன் போட்ட பெட்ரோல் குண்டு- விசாரணையில் அதிர்ச்சி!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் காதலியை தனிமையில் சந்திக்க காதலன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை அடுத்த அய்யம்பாளையம் பொட்டல் குடியிருப்பு பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடிவந்த நிலையில் தகவலறிந்து வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை  அணைத்தனர். இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த திடீர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சந்தேகப்படும்படி ஒரு இளைஞர் இருவர் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் இருந்த நபரான ராஜாங்கத்தை போலீசார் கைதுசெய்தனர். அந்த நபர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்  என்பதும், கொத்தனார் வேலை செய்து வருபவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ராஜங்கத்திடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தது.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

அதே அழகர் பொட்டல் குடியிருப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராஜாங்கம் காதலித்து வந்ததாகவும், அவரை சந்திக்க சென்றால் அப்பகுதி மக்கள் ஏதேனும் கேள்வி எழுப்புவார்கள் என பயம் கொண்ட ராஜாங்கம் அப்பகுதி மக்களை திசை திருப்பி தன் காதலியை சந்திக்க அந்த பகுதியில் உள்ள மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அவர் திட்டமிட்டபடியே திடீரென ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் ஒன்றுகூட ராஜாங்கம் அவரது காதலியை தனிமையில் சந்தித்துள்ளார்.

 

INCIDENT IN DINDIGUL... POLICE ARREST

 

இளைஞர் ஏற்படுத்திய இந்த விபத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றாலும் காதலியை இடையூறின்றி சந்திக்க பெட்ரோல் குண்டு வீசி தீவிபத்தை ஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்த போலீசார் ராஜாங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

   

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.