Skip to main content

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு 18.87 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Published on 23/11/2020 | Edited on 24/11/2020

 

incident cuddalore

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் என்பவரது மகன் ராஜபாலன். இவர் விருதாச்சலத்தில் தனியார் (கேப்டன்) தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த  02.08.2017 அன்ற அவரது சொந்த கிராமமான மருங்கூரில் குளிக்கச் செல்லும்போது, அறுந்து கிடந்த மின் கம்பியின் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
 

அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கிருஷ்ணவேணி, கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையத்தில் உதவி மின்பொறியாளர் அலுவலகம்-மேலப்பாலையூர், செயற்பொறியாளர் அலுவலகம்-விருத்தாசலம், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் ஆகியவற்றிற்கு எதிராகப் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை 09.03.2020 அன்று முடிவுற்றது. வழக்கினை விசாரித்த விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவரசன் கடந்த 16.03.2020 அன்று தீர்ப்பு வழங்கினார். 
 

அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 16 லட்சத்து 80 ஆயிரம் இழப்பீடு வழங்க தீீர்ப்பளித்தார். ஆனால் மின்சார வாரியம் உரிய காலத்தில் இழப்பீடு வழங்காததால், மக்கள் நீதிமன்றத்தில் நிறைவேற்றுப் புகார் அளித்தனர். இதனை விசாரித்த மக்கள் நீதிமன்றத் தலைவர் நீதிபதி இளவரசன், உறுப்பினர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா அடங்கிய அமர்வு 16.80 லட்சத்துக்கு தீர்ப்பளித்த காலத்திலிருந்து 7.5% வட்டியுடன் சேர்த்து மொத்தம் 18 லட்சத்து 87 ஆயிரத்து 902 ரூபாய் மின்சார வாரியம் வழங்க வேண்டுமென வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.

 

incident cuddalore

 

அதையடுத்து இன்று விருத்தாசலம் வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு முன்பு, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி இளவரசன், உயிரிழந்த தொலைக்காட்சி செய்தியாளர் ராஜபாலன் மனைவி கிருஷ்ணவேணியிடம், மேற்படி தொகைக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி ஜெயசூர்யா அரசு வழக்கறிஞர் விஜயகுமார், வாதியின் வழக்கறிஞர் கோ.பாலச்சந்திரன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி, உதவி மின் பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.