Skip to main content

கடலூர் வாலிபர் ஆந்திராவுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை!

Published on 22/11/2020 | Edited on 22/11/2020
INCIDENT IN CUDDALORE

 

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த அருள்மொழி என்பவரது மகன் வினோத்குமார் (24). இவர் சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் வினோத்குமார் கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்த சூழலில் கடந்த 16-ஆம் தேதி வினோத்குமார் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாக கூறி வினோத்குமாரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் வினோத்குமார் குறித்து எந்த தகவலும் தெரியாததால் சந்தேகமடைந்த வினோத்குமாரின் தந்தை அருள்மொழி  இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் தனது மகனை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றதாக 16-ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கடந்த 19-ஆம் தேதி கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் எழில்தாசன்  விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதி  போலீசார் நேற்று காலை கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியிலுள்ள ராமாபுரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் கிடந்ததாகவும், விசாரணையில் அவர் வினோத்குமார் என்பதும் தெரியவந்ததாகவும் தெரிவித்தனர்.  அதையடுத்து வினோத்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேரில் பார்வையிட்டு இறந்தது வினோத்குமார் தான் என உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

அதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் எழில்தாசன் ஆகியோர் வினோத்குமாரின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அவர்களை கொலை செய்யப்பட்டுள்ள வாலிபர் வினோத்குமார் தான் என உறுதி செய்வதற்காக ஆந்திர போலீசாருடன் அனுப்பி வைத்தனர். இன்று சடலத்தை உறுதிசெய்யும் வினோத்குமாரின் பெற்றோர்கள் அவரது சடலத்தை அங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிகிறது.

இதுகுறித்து இரு மாநில, இரு காவல்நிலைய காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வேலை பார்த்த கடலூர் வாலிபர் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.