Skip to main content

கார் வியாபாரத்தில் 12 லட்சம் மோசடி! ஒருவர் கைது... மற்றொருவருக்கு வலைவீச்சு!  

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
incident in cuddalore

 

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பரக்கத் தெருவில் வசிக்கும் முகமதுசாதிக் என்பவரது மகன் முகமது பாருக்(46) என்பவர் கடந்த 22.05.2020 அன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் அளித்தார்.  அந்த புகாரில், ' நான் 18 ஆண்டுகள் குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து விட்டு ஊர் வந்தேன். என்னிடம் எங்கள் ஊர் பெருமாள் தெருவை சேர்ந்த சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் மகன் முகமது ஆஷிக் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை சந்தித்து தானும், பாண்டிச்சேரி சண்முகாபுரம் சோனியா காந்தி நகரை சேர்ந்த தண்டபாணி மகன் அருண்பிரசாத் என்பவரும் கார் வாங்கி விற்கும் தொழில் செய்வதாகவும் , அதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும், அவர்களுடன் இணைந்து தொழில் செய்தால் எனக்கு 50% சதவீதம் லாபம் கொடுப்பதாகவும் கூறி என்னை 12,22,000 (பன்னிரெண்டு லட்சத்து இருபத்திரண்டாயிரம்) முதலீடு செய்ய வைத்து, அதன் மூலம் முகமது ஆஷிக் 9 கார்களை வாங்கி என்னுடைய வீட்டில் விட்டார்.

பின்பு முகமது ஆஷிக் மற்றும் அருண்பிரசாத் ஆகியோர் கார்களை பாண்டியில் வைத்து விற்றால் அதிக விலைக்கு விற்கலாம் என்று கூறி 9 கார்களையும் பாண்டிச்சேரி எடுத்துச் சென்று கார்களை விற்றுவிட்டு பணத்தை எனக்கு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். நான் பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

 

incident in cuddalore


அந்த புகாரின் பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவின்பேரிலும்,  கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  கணகேசன் மேற்பார்வையிலும்,  கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரி(பொறுப்பு) பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து நேற்று (18.9.2020) மேல்பட்டாம்பாக்கம் பெருமாள்கோவில் தெருவிலிருந்த முகமது ஆஷிக்கை அவரது வீட்டில் வைத்து உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், விக்ரமன், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணி, தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள அருண்பிரசாத்தை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.