Skip to main content

முதல்வர் வருகைக்காக பழமையான ஆலமரங்கள் வெட்டி அகற்றமா..? கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

INCIDEDNT IN PUDUKOTTAI

 

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, பல கட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு, தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று வருகிறார். இந்தச் சுற்றுப்பயணம், அரசு செலவில் ஏற்பாடாகி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எதிர்வரும் 25 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் தான், அவர் வந்து செல்லும் சாலையை மறுமராமத்து செய்யத் தொடங்கியுள்ளனர். அதேபோல அனைத்துத் துறையும் அவசரகதியில் கோப்புகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முதல்வர் வருகைக்காக சாலை ஓரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மரங்களை அகற்றி வருகின்றனர். விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வீரடிப்பட்டி ஊராட்சியில் உள்ள தாண்டீஸ்வரம் கிராமத்தில், சாலையின் தூரத்தில் நின்ற பழமையான 3 ஆலமரங்களை, வேகமாக வெட்டி பொக்கலின் மூலம் லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். இப்படி மாவட்டத்தில் எத்தனை மரங்களைக் கொன்று முதல்வரை வரவேற்கப் போகிறார்களோ என அப்பகுதி வாழ் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்..

 

INCIDEDNT IN PUDUKOTTAI


இது குறித்து மரங்களின் மரங்களின் மீது காதல் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் கூறும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் மரங்கள் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 2018 இல், தாக்கிய 'கஜா' புயல் அத்தனை மரங்களையும் அடியோடு சாய்த்துவிட்டது. அப்படியும் ஆங்காங்கே பழமையான மரங்கள் நிலைத்து நின்றது. சாலையோரம் இருக்கும் சாய்ந்த மரங்களை மீட்க, நெடுஞ்சாலைத்துறை மூலம் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். பல இடங்களில் பராமரிப்பின்றி கன்றுகள் கருகிப் போனது. இப்படி நிலைத்து நின்ற மரங்களையும் முதல்வர் வருகையைக் காரணம் காட்டி, வெட்டி அகற்றுவது பெரும் வேதனையாக உள்ளது. மரங்களை வளர்க்க இன்று சின்னக்குழந்தைகள் கூட முனைப்புக் காட்டும் போது வளர்ந்த மரங்களை வெட்டி அகற்றலாமா?
 

Ad

 

விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், உயிர் மரங்களை வெட்டினால் வழக்குப் பதிவு செய்து நடடிக்கை எடுக்கப்படும் என்று 'கஜா' புயல் நேரத்தில் சொன்னதோடு பலர் மீது வழக்கும் பதிய வைத்தார். ஆனால், அவரது தொகுதியிலேயே முதல்வரின் பெயரால் மரங்கள் வெட்டப்படுவது அமைச்சருக்குத் தெரியாமல் இருக்குமா என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.