Skip to main content

ஓட்டுப் போடுவது எனக்குப் பெருமை! -மனம் திறந்த நடிகர் அஜித்!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

I'm proud to vote! -A open minded actor Ajith!

 

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தென்சென்னைக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சீனியர் சிட்டிஷன்கள் முதல், முதன்முறை வாக்காளர்கள் வரை காலையிலேயே வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்ததை பார்க்க முடிந்தது. கியூவில் நின்று அவர்கள் வாக்களித்தனர். சீனியர் சிட்டிசன்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி கியூ வைத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் பலரிடமும் வெளிப்பட்டது.

 

அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்தனர். வாக்குச் சாவடிக்கு வந்த சினிமா பிரபலங்களில் முதல் நபராக இருந்தார் நடிகர் அஜித் திருவான்மியூர் அரசு பள்ளிக்கூடத்தில் அமைந்திருந்த வாக்குச் சாவடிக்கு தனது மனைவி சாலினியுடன் காலை 6.40-க்கெல்லாம் வந்து விட்டார் நடிகர் அஜித்.

 

மனைவியைத் தவிர தன்னுடன் யாரையும் அஜித் அழைத்து வரவில்லை. அவரை கண்டதும் வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அலுவலர்களும், அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளும் அவர்களை உட்காரச் சொன்னார்கள். ஆனால் அஜித்தும் அவரது மனைவியும் , ’’வேண்டாங்க! நன்றி ‘’ என்று சொன்னார்கள். 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியதும் வரிசையில் நின்று அவர்கள் வாக்களித்தனர். அஜித் வந்திருப்பதையறிந்து அவரிடம் பேசுவதற்கு இளம் வாக்காளர்கள் முயற்சித்தனர். அதனை விரும்பாத அஜித், ‘’இது ஓட்டுப் போடக்கூடிய இடம். எங்களை சாதாரண மனிதராக பாருங்கள் ‘’ என்று கைப்கூப்பினார் அஜித்.

 

தேர்தல் அலுவலர் ஒருவர், ‘’ காலையிலேயே வந்துவிட்டீர்களே, சார் ?’’ என்று கேட்க , ‘’ ஓட்டுப் போடுவதைப் பெருமையாக நினைக்கிறேன். முதல் நபராக நான் வரும் போது, என்னை பார்க்கும் எனது ரசிகர்களுக்கு காலையிலேயே ஓட்டுப் போட வேண்டும் என்கிற உந்துதல் அவர்களுக்கு கிடைக்கலாம். ஓட்டுப் போடுவதை பெருமையாக நினைத்து வாக்குச் சாவடிக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான், வாக்களிக்கும் முதல் நபராக நாம் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் காலையிலேயே வந்தேன். தேர்தல்னு வந்தால் வாக்களிக்கும் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ‘’ என்று சொல்லி, தேர்தல் அலுவலரை வியப்பில் ஆழ்த்தினார் நடிகர் அஜித்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்