Skip to main content

“ஐ.ஐ.டி. என்பது தொடர்ந்து ஒரு மர்ம தீவாகவே இருக்கிறது”-செல்வப்பெருந்தகை!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

 

சென்னை ஐ.ஐ.டி. நிறுவன படுகொலை செய்யப்பட்ட மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு நீதி வேண்டி, வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனை கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது தலைமை தாங்கினார். இதில்  அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும்  பல்வேறு அமைப்பினர் கண்டன உரை ஆற்றினர். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசியதாவது, “மன உளைச்சல் ஏற்படுத்தியதால் பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி நிறுவன படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். அதை தொடர்ந்து ஐ.ஐ.டியில் நடந்த பல படுகொலைகள் வெளியே வந்தது நாம் அறிந்த விஷயம் தான். இந்த விஷயத்தில் நீதி வேண்டும் என்று அன்றே தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடிய காரணத்தால் இன்று கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் முழு முழுக்க அப்பட்டமான பொய் சிபிஐயால் புனையப்பட்டிருக்கிறது என்பது நாமெல்லாம் தெரிஞ்ச ஒன்று தான். சுதர்ஷன பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் தான் எனது மரணத்திற்கு காரணம் என சூசைட் நோட்ஸ் இருந்தும் இன்று பாத்திமாவிற்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது.

 

இதே போன்று சென்னை ஐ.ஐ.டியில் 2019ல் மட்டும் 6 மாணவர்கள் இறந்திருக்காங்க. இதுவரையில் பத்து வருடத்தில் 14 மாணவர்கள் இறந்திருக்காங்க. ஐ.ஐ.டி என்பது தொடர்ந்து ஒரு மர்ம தீவாகவும், உயர் ஜாதியினர் ஆதிக்கம் இருக்கக்கூடிய ஒரு இடமாகவே இருக்கிறது என்பது சிபிஐ அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. முழுக்க முழுக்க அப்பட்டமாக பொய் சொல்லப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை ஒரு போதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த விஷயத்தில் நீதி கிடைக்கிற வரைக்கும் மிகப் பெரிய ஒரு மக்கள் மாணவர்கள் திரள் போராட்டத்தை முன்னெடுப்போம் சொன்னது போல இன்று இங்கு தொடங்கியிருக்கிறோம். அதனால் பாத்திமா லத்தீப்பிற்கு நீதி கிடைக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடரும். அதே போல ஐ.ஐ.டியில் எத்தனை மாணவர்கள் இறந்தார்களோ அத்தனை மாணவர்களின் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிகொண்டு வருவோம்” எனத் தெரிவித்தார்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.