Skip to main content

விபத்தில் மலை வாசிகள் நால்வர் உயிரிழப்பு...!

Published on 08/11/2020 | Edited on 09/11/2020
Iincident in erode forest

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் மேற்கு மலைப் பகுதியில் உள்ள தம்புரெட்டி மலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அந்தியூர் அருகே உள்ள வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்டத்திற்கு கூலி வேலைக்காக வாடகை கார் ஒன்றில்  வந்துள்ளனர்.

 

அந்த வாகனத்தில் வரும்போது மணியாச்சி பள்ளம் என்ற இடத்தில் வாகனம் இறக்கத்தில் இறங்கி கொண்டிருக்கும்போது திடீரென காரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கார் சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதனை கண்டு அங்கு பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

சம்பவம் நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வெகு நேரம் அவர்களை மீட்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.இந்த விபத்தில் மலை பகுதிகூலி தொழிலாளர்களான தம்புரெட்டி கிராமத்தை சேர்ந்த தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் அந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மற்ற 11 பேரில் 3 பேர் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 8 பேர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் தற்போது முதலுதவி சிகிச்சை பெற்று தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது ஒரு காரில் 15 பேர் என அதிகளவில் ஆட்கள் ஏற்றி வந்ததன் காரணமாகவே, வாகனம் கட்டுப்பாட்டை இழந்தபோது, வாகனத்தில் இருந்து வெளியில் வரமுடியாமல் 4 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருந்தால் அதிக அளவு உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மலை கிராமத்தில் உள்ள ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அந்த கிராமத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்