Skip to main content

"தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பது குற்றம் என்றால் அதை தினமும் செய்வோம்''- அண்ணாமலை

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

If it is a crime to tap wrongdoers, let's do it every day" - Annamalai

 

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

 

2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜெ.பி. நட்டா சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2024 தேர்தல் பணிகளுக்காக பாஜகவின் பல்வேறு தலைவர்களை சந்தித்த அவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு சென்றார். அங்கு மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு 2024 தேர்தல் பணிகளை குறித்து கலந்து ஆலோசித்த அவர் இரவு நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார்.

 

இதன் பின் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் இருள் சூழ்ந்ததை போல் திமுக ஆட்சி சூழ்ந்துள்ளது. பெட்டிக் கடையில் தேன் மிட்டாய் வாங்குவது போல் கஞ்சாவை வாங்கி வருகின்றனர். ஆனால் அவர்களை எல்லாம் கைது பண்ணாமல் தமிழகம் முழுவதும் பாஜக தொண்டர்களை குறிவைத்து கைது செய்து கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தில் 4 கோடிக்கும் அதிகமான பெண்கள் இருக்கின்றனர். ஆளுங்கட்சியின் எம்.பி மேடையில் பேசும் போது நேரடியாக நம்முடைய பெண்களை கொச்சைப்படுத்துகிறார். அதை எதிர்த்து யாரெல்லாம் குரல் கொடுத்தார்களோ அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

எங்கும் நடக்காத ஒரு சர்வாதிகார ஆட்சி தமிழக மண்ணில் நடந்து கொண்டிருக்கிறது. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பது ஒரு குற்றமாக இருந்தால் அதை தொடர்ந்து செய்வோம். தினமும் செய்வோம். ஒரு ஒரு நிமிடமும் செய்வோம். தமிழக சிறைச்சாலை முழுவதும் நிரம்பும் அளவிற்கு செய்வோம். கடைசி பாஜக தொண்டன் தமிழகத்தில் இருக்கும் வரை ஆ.ராசா பேசியதை கேள்வி கேட்போம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.