Skip to main content

'வேட்பாளர் தோற்றால் நீங்கள்தான் நீக்கப்படுவீர்கள்'-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கறார்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

'If the candidate loses, you will be removed' - DMK leader M.K.Stalin said

 

எதிர்வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது. இதற்காக அண்மையில் அதன் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள்  கூட்டம் இன்று காணொளி வாயிலாக தொடங்கியுள்ளது.

 

இதில் மாவட்டச் செயலாளர்கள் 72 பேர் காணொளி வாயிலாக இணைந்துள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களும் இந்த காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மண்டல வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டங்கள் நடத்தி இருந்தார்.

 

இந்நிலையில் இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொறுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை கொடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தோற்றால் அந்த மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படுவார். தொகுதிப் பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்படுவர். தேர்தல் பணியில் தொய்வு இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். அவர்கள் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். திமுக கூட்டணியின் வேட்பாளர் தோல்வி அடைந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“தேர்தலில் நத்தம் தொகுதியில் மட்டும் 2 லட்சம் ஓட்டுகள் வாங்க வேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

2 lakh votes should be bought Natham constituency alone elections says Minister sakkarapani

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் சாணார்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி வரவேற்றார். எம்.பி.வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆண்டியம்பலம், மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

 

கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். குறிப்பாக நத்தம் சட்ட மன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து ஐயாயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார். இதற்கு நீங்கள் தான் காரணம். கடந்த முறை நாம் எதிர்க் கட்சியாக இருந்தோம். ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் கடந்த 30 மாதங்களில் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா டவுன்பஸ், பள்ளிகளில் காலை உணவு திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி வருகிற பாராளுமன்றத்தில் வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். 

 

நத்தம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அரசு கல்லூரி, புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், அமராவதி, காவேரி, ஆற்றின் உபரி நீர்மூலம் குளங்களை நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நத்தம்  சட்டமன்ற தொகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளில் 2 லட்சம் வாக்குகள் திமுக பெற வேண்டும். இதற்கான பணியை உடனடியாக நீங்கள் தொடர வேண்டும்” என்று கூறினார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்