Skip to main content

இரு மாநில நல்லுறவை ஏற்படுத்தும் நவராத்திரி விழாவுக்கு குமரி சுவாமி விக்கிரங்கள் கேரளாவுக்கு புறப்பட்டது...

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

The idols of Kumari Swami left for Kerala for the Navratri festival


திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மனாபபுரம் இருந்தபோது நவராத்திரி விழா இங்கு பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு மன்னர் மார்த்தாண்ட வா்மா் காலத்தில் திருவனந்தபுரத்தை தலைநகரமாக மாற்றியதையடுத்து அங்கு நவராத்திரி விழா இன்றுவரை விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது.


 
பின்னர் குமரி மாவட்டம் தாய் தமிழக்தோடு இணைந்ததையடுத்து அந்த நவராத்திரி விழாவுக்காக பாரம்பரியம் மாறாமல் குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்கிரங்களை திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்ல போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுத்தோறும் நவராத்திரிக்காக சுவாமி விக்கிரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

 

இதற்காக சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் விக்கிரங்கள் பல்லாக்கில் வைத்து தூக்கி கால்நடையாக சுமந்து பக்தர்கள் திருவனந்தபுரம் கொண்டு செல்கின்றனர். இதற்கான விழா இன்று (புதன்) காலை 8.30 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையில் நடந்தது. இந்த விழா ஆண்டு தோறும் இரு மாநில அரசு மரியாதையுடன் இரு மாநில போலிசார் அணி வகுப்புடன் பெரும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த சுவாமி விக்கிரங்கள் திருவனந்தபுரம் செல்லும் 56 கி.மீ தூரமான சாலைகளின் இரு பக்கங்களிலும் கொடி தோரணங்கள் கட்டி பக்தர்கள் வரிசையாக நின்று திருக்கன் சார்த்தி ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். இதனால் அது ஒரு விழா கோலம் பூண்டு இருக்கும்.

 

இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் இந்த விழாவை எளிமையாக அதுவும் சுவாமி விக்கிரங்களை பக்தா்கள் கால் நடையாக பல்லாக்கில் தூக்கி செல்லாமல் வாகனத்தில் ஏற்றி ஒரே நாளில் திருவனந்தபுரம் அதுவும் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் கொண்டுசெல்ல கேரளா அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு குமரி மாவட்ட நிர்வாகமும்  ஒத்துக்கொண்டது.

 

இந்த நிலையில் இரண்டு அரசுகளும் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பின்பற்றாமல் அழிக்க முயற்சி செய்வதாக பாஜக, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளும் அதோடு காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்தினார்கள். அதேபோல் கேரளா அரசை கண்டித்து அங்கு பாஜகவினர் போராட்டங்கள் நடத்தினார்கள். இதற்கு கோவில் பக்தர்கள் மத்தியிலும் ஆதரவு பெருகியது. இதையடுத்து மீணடும் இரு மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை நடந்தது.

 

இதில் சுவாமி விக்கிரங்களை பக்தர்கள் கால்நடையாக தூக்கி செல்வது என்றும் நிகழ்ச்சி நடைபெறும் பத்மனாபபுரம் அரண்மனையில் குறிப்பிட்ட அளவு பக்தா்கள் மட்டும் அனுமதிப்பது என்றும் விக்கிரங்கள் செல்லும் வழி நெடுகில் பக்தா்கள் கூட்டமாக நிற்கக்கூடாது என்றும் யானையும் ஊா்வலத்தில் அனுமதியில்லையென்று முடிவு எடுக்கபட்டு அதனடிப்படையில் இந்த ஆண்டு இந்த விழா எளிமையாக நடந்தது.

 

இதில் கேரளா தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கலந்துகொண்டு மன்னா் உடைவாளை குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணியிடம் கொடுக்க அவா் கேரளா தேவசம் போர்டு மேலாளா் மோகனகுமாரிடம் கொடுத்தார். இதையடுத்து சுவாமி விக்கிரங்கள் கொட்டும் மழையில் ஊா்வலமாக சென்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.