Skip to main content

''என் புள்ளைக்கு இன்னும் ஒரு செட் துணி எடுத்துத்தரல''-மீட்டர் வட்டி காரணமாக வீடியோ வெளியிட்டு விஷம் குடித்த இளைஞர்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

"I won't take one more set of clothes for my daughter" - the young man who published a video and got poisoned due to meter interest!

 

அண்மைக்காலமாகவே கந்துவட்டி கொடுமை, ஆன்லைன் ரம்மி, கடன் செயலி உள்ளிட்ட காரணங்களால் நிகழும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல் இது தொடர்பாக தற்கொலை செய்துகொள்பவர்கள் வீடியோ வெளியிட்டு தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்திவிட்டு இறந்து போகிற சம்பவங்கள் அதிகம்.

 

இந்நிலையில் இளைஞர் ஒருவர் மீட்டர் வட்டி காரணமாக தற்கொலை செய்து கொள்ள விஷம் குடிப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த வீடியோவில், ''தாலியில் இருந்து எல்லாத்தையும் வித்துதான் கடன காட்டினேன். ஆனால் மீட்டர் வட்டி கணக்குப்போட்டு  70 ஆயிரத்திற்கும் 85 ஆயிரமும், 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒருலட்சம் ரூபாயும், அந்த ஒருலட்சத்திற்கு  90 ஆயிரம் ரூபாயும் போட்டு, இப்போ ஐந்தாறு லட்சம் ரூபாய் கணக்கு சொல்றாங்க. ஆனா என்னால இத கட்ட முடியல.

 

எங்க அண்ணன் போய் அசல மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னான். ஆனா அவனும் கட்டற மாதிரி தெரில. என்ன கண்டுக்கல... என்ன கண்டுக்கிட்டா பரவால்ல. எங்க அப்பாவும் பார்த்துக்கல அம்மாவும்  பார்த்துக்கல. எங்க அண்ண கொஞ்சநாள் பார்த்துக்கிட்டான் அப்புறம் அவனும் விட்டுட்டான். என் மனைவியை கூட என்னால பார்த்துக்க முடில. வாரமானால் 2000 ரூபா சம்பளத்துக்கு போவேன் அத கடன கட்டிப்புட்டு போயிடுவேன். பொறந்ததுல இருந்து என் புள்ளைக்கு இன்னும் ஒரு செட் துணி எடுத்துத்தரல நானு. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்கேன் நானு. இதுக்கு மேல எல்லாம் என்னால் இருக்க முடியாது'' என கண்ணீர் விட்டு அழ, அந்த நேரத்தில் 'அப்பா...' என குழந்தை மழலை மொழியில் அழைக்கும் ஒலி அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

 

மேலும் அழுதபடியே பேசிய அந்த இளைஞர் ''இதுக்குமேல என்னால வாழ முடியாது. முடிவு எடுத்துட்டேன். என் புள்ளைய, பொண்டாட்டிய பாத்துக்கோங்க. மறுபடியும் கடன்காரன் வந்து அவங்களை புடிச்சு உங்க அப்பன் கடன்வாங்கிட்டு போனான்னு ஏதாவது பண்ணுவாங்க'' என கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் விஷத்தை குடித்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.