Skip to main content

''என் புள்ளைக்கு இன்னும் ஒரு செட் துணி எடுத்துத்தரல''-மீட்டர் வட்டி காரணமாக வீடியோ வெளியிட்டு விஷம் குடித்த இளைஞர்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

"I won't take one more set of clothes for my daughter" - the young man who published a video and got poisoned due to meter interest!

 

அண்மைக்காலமாகவே கந்துவட்டி கொடுமை, ஆன்லைன் ரம்மி, கடன் செயலி உள்ளிட்ட காரணங்களால் நிகழும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல் இது தொடர்பாக தற்கொலை செய்துகொள்பவர்கள் வீடியோ வெளியிட்டு தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்திவிட்டு இறந்து போகிற சம்பவங்கள் அதிகம்.

 

இந்நிலையில் இளைஞர் ஒருவர் மீட்டர் வட்டி காரணமாக தற்கொலை செய்து கொள்ள விஷம் குடிப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த வீடியோவில், ''தாலியில் இருந்து எல்லாத்தையும் வித்துதான் கடன காட்டினேன். ஆனால் மீட்டர் வட்டி கணக்குப்போட்டு  70 ஆயிரத்திற்கும் 85 ஆயிரமும், 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒருலட்சம் ரூபாயும், அந்த ஒருலட்சத்திற்கு  90 ஆயிரம் ரூபாயும் போட்டு, இப்போ ஐந்தாறு லட்சம் ரூபாய் கணக்கு சொல்றாங்க. ஆனா என்னால இத கட்ட முடியல.

 

எங்க அண்ணன் போய் அசல மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னான். ஆனா அவனும் கட்டற மாதிரி தெரில. என்ன கண்டுக்கல... என்ன கண்டுக்கிட்டா பரவால்ல. எங்க அப்பாவும் பார்த்துக்கல அம்மாவும்  பார்த்துக்கல. எங்க அண்ண கொஞ்சநாள் பார்த்துக்கிட்டான் அப்புறம் அவனும் விட்டுட்டான். என் மனைவியை கூட என்னால பார்த்துக்க முடில. வாரமானால் 2000 ரூபா சம்பளத்துக்கு போவேன் அத கடன கட்டிப்புட்டு போயிடுவேன். பொறந்ததுல இருந்து என் புள்ளைக்கு இன்னும் ஒரு செட் துணி எடுத்துத்தரல நானு. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்கேன் நானு. இதுக்கு மேல எல்லாம் என்னால் இருக்க முடியாது'' என கண்ணீர் விட்டு அழ, அந்த நேரத்தில் 'அப்பா...' என குழந்தை மழலை மொழியில் அழைக்கும் ஒலி அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

 

மேலும் அழுதபடியே பேசிய அந்த இளைஞர் ''இதுக்குமேல என்னால வாழ முடியாது. முடிவு எடுத்துட்டேன். என் புள்ளைய, பொண்டாட்டிய பாத்துக்கோங்க. மறுபடியும் கடன்காரன் வந்து அவங்களை புடிச்சு உங்க அப்பன் கடன்வாங்கிட்டு போனான்னு ஏதாவது பண்ணுவாங்க'' என கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் விஷத்தை குடித்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.