Skip to main content

“எந்த நிலையிலும் தான் விலகப் போவதில்லை” - நீதிபதி திட்டவட்டம்; ஷாக்கில் அமைச்சர்கள்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

"I will not withdraw from the investigation of these cases under any circumstances" - the judge is firm

 

அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளைத் தாமாக முன்வந்து மீண்டும் மறு விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்றே நடப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2006 - 2010 திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 44 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அதேபோல் 76 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்குகளில் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

 

n

 

இந்த தீர்ப்புகளுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கு மறு விசாரணையை கையில் எடுத்துள்ளார். இந்த வழக்குகள் மீண்டும் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, கீழமை நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவை சட்ட விரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலக வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் தங்கம் தென்னரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ரமேஷ், 'நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரக்கூடிய விஷயத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்' என வாதிட்டார்.

 

இதற்குப் பதிலளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்றுத்தான் தாமாக இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், எந்த நிலையிலும் வழக்குகளின் விசாரணையில் இருந்து தான் விலகப் போவதில்லை எனக் கருத்து தெரிவித்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தொடர்பான வழக்கை நவம்பர் இரண்டாம் தேதிக்கும், தங்கம் தென்னரசுவினுடைய வழக்கின் விசாரணையை நவம்பர் ஒன்பதாம் தேதிக்கும் ஒத்திவைத்தார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“15,300 மின்வாரிய ஊழியர்கள் தயார்..” - அமைச்சர் தங்கம் தென்னரசு 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

"15,300 Power Board employees are ready.." - Minister Thangam Thanarasu

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

 

இது புயலாக மாறும்போது அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது; “அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் மின் கம்பங்கள் தயாராக இருக்கின்றன. மாவட்ட கட்டுப்பாட்டு மையங்களில் மின் துறை அலுவலர்கள் களப் பணியாற்றி வருகின்றனர். புயல் கரையைக் கடக்கும்போது கடலோர மாவட்ட மக்களுக்கு மின் விநியோகம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின்னகத்திற்கு வரும் அழைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 15,300 மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“மழைக்கு இதுவரை 5 பேர் உயிரிழப்பு” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

"Five people have passes away due to rain so far" - Minister K. K. S. S. R.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

 

இது புயலாக மாறும்போது அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

 

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மழையால் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மழைக்கு இதுவரை ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 98 கால்நடைகள் பலியாகியுள்ளன, 420 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை பாதிப்பு அதிகமிருக்கும் பகுதிகளில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 

 

மனித உயிரிழப்புக்கும், கால்நடை உயிரிழப்புக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாய பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் காலதாமதம் ஆகிறது. அதற்கு காரணம், பயிர் பாதிப்புகளை வேளாண்துறை ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும். அதன் காரணமாக மட்டுமே அது தாமதமாகிறது. மழை வெள்ளம் பாதிப்பு எங்கெங்கு வரும் என எதிர்பார்க்கிறோமோ அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் எல்லாம் மீட்கப்பட்டு ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளோம்” என்று தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்