Skip to main content

“கிராமத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்”-ஊராட்சி மன்ற தலைவர்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

I want to be a role model for the village

 

பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது சொத்துக்களை விற்று குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். ஆனால் சமீப காலமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் சேர்த்து படித்து வந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது இருவேல்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமண ஆனந்த் - ஜெயஸ்ரீ தம்பதியர்.

 

இதில் ஆனந்த் அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஏழு வயதில் பரிமளா தேவி, ஐந்து வயதில் பவித்ரா தேவி என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களை ஏற்கனவே தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார். அந்த வகையில் ஊராட்சி மன்ற தலைவர் தனியார் பள்ளியில் படித்து வந்த தனது இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார். ஆனந்த் இந்த நிலையில் அவர்களை அங்கிருந்து மாற்றி அவரது ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளார்.

 

நேற்று ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் குடியரசு தின விழாவில் பங்கேற்று கொடியேற்றிய ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் தனது மகள்கள் இருவரையும் அழைத்துச் சென்று பரிமளாதேவியை மூன்றாம் வகுப்பிலும், பவித்ரா தேவியை ஒன்றாம் வகுப்பிலும் சேர்த்துள்ளார். அந்த வகையில் ஊராட்சி மன்ற தலைவர் தனியார் பள்ளியில் படித்து வந்த தனது இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

 

அது குறித்து அவர் கூறும்போது, “நான் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு ஒரு முன்னுதாரணமாக  இருக்க விரும்புகிறேன். அந்த அடிப்படையில் தான் தனியார் பள்ளியில் படித்து வந்த எனது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்துள்ளேன். அரசுப் பள்ளியில் அனைத்து சலுகைகளும் தரமான கல்வியும் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு காரணம் எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வரவேண்டும்” என்று கூறுகிறார் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த்.

 

தலைமை ஆசிரியை அன்புக்கரசி இனிப்பு மற்றும் சீருடைகள், புத்தகங்கள் கொடுத்து ஊராட்சி மன்ற தலைவரின் பிள்ளைகளை வரவேற்று வாழ்த்தினார். இந்த சம்பவம் பரவி பல தரப்பினரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.