Skip to main content

''என்னுடைய தமிழுணர்வுக்கு காரணமானவரை இழந்துவிட்டேன்'' - தொ.பரமசிவன் மறைவுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

 '' I have lost the reason for my so much Tamil feeling '' - Seeman tearful tribute tho.paramasivan

 

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

 

தமிழில் இயங்கி வந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தொ.பரமசிவன். 'அறியப்படாத தமிழகம்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற நூல்கள் அவரின் முக்கியப் படைப்புகளாகத் திகழ்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தனது நூல்களின் மூலம் தேடித்தந்தவர். அவரது 'அழகர்கோயில்' நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் தற்போது வரை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், அவரது மறைவு குறித்து, தனியார் தொலைக்காட்சியில் தனது இரங்கலை தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றவர்களுக்கு இது ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியில்லை. நான்  அவரிடம் படித்த மாணவன். இளையான்குடி டாக்டர்.சாகிர் உசேன் கல்லூரியில் அவர் தமிழ்த்துறை தலைவராக இருந்தார். அந்த நேரத்தில் நான் ரொம்ப சின்ன பையன். இளங்கலை பொருளாதார மாணவன்தான். எனக்கு இவ்வளவு தமிழுணர்வு இருக்கிறது என்றால் அதற்கு ஐயாதான் காரணம். என்னை ஊட்டி வளர்த்தார் என்பதில் மாற்று செய்தி இருக்க முடியாது.

 

அப்பொழுது கல்லூரி ஆண்டு மலருக்குக் கவிதை எழுதிக் கொடுங்கள், கட்டுரை எழுதிக் கொடுங்கள், உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் என்று அவர் அறிவிக்கிறார். அப்பொழுது கவிதைகளை நானும் எழுதி கொடுத்தேன். எல்லாமே காதல் கவிதையாக இருக்கிறது என அதையெல்லாம் கிழித்து மேலே வீசினார். அப்பொழுது எனக்குக் கோபம் வந்து அண்ணன்களைக் கூட்டிக்கொண்டு அய்யா ஏன் இப்படிப் பண்ணுகிறார் என அவரிடம் கேட்போம். ''தம்பி நல்லாதானே கவிதை எழுதி இருக்கான் நீங்க ஏன் கிழித்துத் தூர வீசுகிறார்கள்'' எனக் கேட்க ''என்னடா உன் தம்பி எழுதிட்டான். காதலைதானே பாடுகிறான் மனிதனைப் பாடுவதற்கு ஒருத்தனும் இல்லையேடா. அவனாவது வரட்டும்டா... மனிதனைப் பாடச் சொல்லுடா'' என்றார். அன்னைக்கு தான் எனக்கு மானுடம் குறித்த சிந்தனையே வந்தது. அப்பேர்ப்பட்ட ஒரு பேரறிஞர் அவர். 

 

 '' I have lost the reason for my so much Tamil feeling '' - Seeman tearful tribute tho.paramasivan

 

அதன்பின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்குப் போய்விட்டார். அங்கிருந்து அவர் பணி செய்துவந்தார். அவருக்கு சர்க்கரை நோய்  இருந்தது. அண்மையில் நான் சந்திக்கும்போது எனக்கு வயசு ஆயிடுச்சு என்று அவர் கூற, இதெல்லாம் ஒரு வயசா ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் என்று திட்டி விட்டேன். தற்பொழுது, ஒரு பெரிய அறிஞரை தமிழ்ப் பேரினத்தின் ஒரு அறிவு பெட்டகத்தை இழந்துவிட்டோம். நான் கட்சித் தொடங்கியபோது என்னை ஊக்கப்படுத்தி, அரசியல் வழிப்படுத்திய ஒரு பேராசான். அப்படிபட்ட ஒரு தமிழறிஞரை தமிழ்ச் சமூகம் இழந்துவிட்டது. 'அறியப்படாத தமிழகம்' என்பன உள்ளிட்ட எத்தனையோ புத்தகங்களை எழுதிய அப்படிப்பட்ட அறிஞருடைய மாணவன், அவரிடம் தமிழ்ப் படித்த மாணவன்  என்ற திமிர் எனக்கு உண்டு. அப்படிப்பட்ட ஒரு பேரறிஞரை நான் இழந்துவிட்டேன் என்பதால், ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு எனக் கண்ணீர் மல்க தனது இரங்கலைத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்