Skip to main content

ஹைட்ரோ கார்பன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

மண்ணை மலடாக்கி விவசாயத்தை அழித்து விவசாயிகளை அகதிகளாக விரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு தொடங்கி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் என டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விவசாயிகள் மத்தியில் போராட்டத் தீ பற்றி எரிந்தது. தீயை அணைக்க முயல்வது போல போராடிய மக்கள் மீதே வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தார்கள். எத்தனை வழக்கு போட்டு எத்தனை பேரை சிறைக்கு அனுப்பினாலும் பொன் விளையும் பூமியை தரிசாக்கும்  ஹைட்ரோ கார்பன் எடுக்க விடமாட்டோம் என்பதில் ஒட்டு மொத்த விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.

HYDRO CARBON PROJECT DELHI SUPREME CORUT

இந்த நிலையில் தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதி காவிரி பாசப் பகுதிகளை ஏதோ காரணத்தால் தவிர்த்துவிட்டாலும் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அறிவிப்பு வெளியான பிப் 20- க்கு பிறகு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை என்று அந்த சட்ட முன்வரைவுகள் சொன்னது. ஆனால் அதற்கு முன்பே அறிவித்து வேதாந்தா, ஓஎன்ஜிசி- யிடம் கொடுத்த திட்டங்கள் என்னாகும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே மன்னார்குடியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் சில விவசாயிகளை வைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஆயத்தமானார் கோட்டாட்சியர். தகவல் அறிந்து சென்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் சட்டத்திற்கு புறம்பாக கூட்டம் நடத்தக்கூடாது என்று கூட்டத்தை நடத்த விடாமல் வாக்குவாதம் செய்து நிறுத்தினார். அடுத்த நாள் விவசாயிகள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.

HYDRO CARBON PROJECT DELHI SUPREME CORUT

இந்தப் பிரச்சனைகள் இப்படியே இருக்கும் நிலையில் தான் கடந்த மாதம் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதியோ மக்கள் கருத்தோ கேட்கவேண்டியதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பிஆர் பாண்டியன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த நிரந்தரத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்று (மார்ச் 2 திங்கள் கிழமை தொடங்க உள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக டெல்லி செல்லும் பி.ஆர்.பாண்டியனை விவசாயிகள் வழி அனுப்பி வைத்தனர்.


இனிமேலாவது தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை உண்டா? இல்லையா? என்பதை தெளிவாக விளக்கினால் விவசாயிகள் சந்தேகமின்றி அச்சமின்றி வாழ்வார்கள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.