Skip to main content

கணவனின் முறையற்ற தொடர்பு... ஊரையே அலறவிட்ட மனைவியின் செயல்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

சென்னையில் மணலியில் கணவன் முறையற்ற தொடர்பிலிருந்ததை கண்டித்த மனைவி கதவை தாழிட்டுக்கொண்டு சமையல் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு அந்த பகுதி மக்களை அலறவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை மணலி ஈ.வே.ரா பெரியார் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் கண்ணா-ரேணுகா தம்பதியினர். மதுரையைச் சேர்ந்த ரேணுகாவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் கண்ணா திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரமேஷ் கண்ணா ஒரு ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். ரேணுகா வீட்டிலேயே பியூட்டி பார்லர் நடத்திவந்தார். ரமேஷ் கண்ணா அண்மை காலமாக வேறொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரமேஷ் கண்ணா-ரேணுகா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ரேணுகாவுக்கும் கணவன் ரமேஷ் கண்ணாவிற்கும் இடையே முறையற்ற தொடர்பு குறித்து மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரேணுகா அறையின் கதவை தாழிட்டுக்கொண்டு  அறையில் இருந்த மூன்று கேஸ் சிலிண்டர்களை திறந்து வைத்துள்ளார். அறையில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்ட ரேணுகா தனக்கு நீதிவேண்டும் என சொல்லியபடி கதவை திறக்க மறுத்தார்.

 

இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் மணலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் ரேணுகா கதவை திறக்கவில்லை. இதனால் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற நிலையில் 108 ஆம்புலன்ஸ்-ம் கொண்டு வரப்பட்டது. மேலும் ரேணுகா இருந்த வீட்டை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக போலீசாரின் அறிவுறுத்தல்படி வெளியேற்றப்பட்டனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த மணலி கவுன்சிலர் ரேணுகாவிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, ரேணுகாவின் தாய், உறவினர்கள் என யார் பேச்சும் எடுபடாமல் போனது. மதியம் சுமார் 12 மணிக்கு கதவை தாழிட்ட ரேணுகா இரவு 8 மணிவரை கதவைத் திறக்கவில்லை. இதனால் மின்சாரம் இல்லாமல் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் அவர் இப்படித்தான் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக பூச்சாண்டி காட்டுவார். நாங்களே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போகிறோம் என ரவுத்திரமாக பேச தொடங்கினர். இனியும் பொறுக்கமுடியாது என முடிவெடுத்த போலீசார் தண்ணீரை பீச்சி அடித்துக்கொண்டே கதவை உடைத்தனர். உள்ளே மயங்கிய நிலையில் இருந்த ரேணுகா மீட்கப்பட்டார். ரேணுகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்ததும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.