Skip to main content

தோழியுடன் நெருக்கமாக இருந்த கணவர்... நேரில் கண்ட மனைவி எடுத்த விபரீத முடிவு

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Husband who was close with girlfriend; The perverse decision taken by the wife who witnessed it in person

 

கணவர், அவருடைய தோழியுடன் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த மனைவி, விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

சேலம் 3 சாலை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (29), லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி கோமதி (20). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் குழந்தை உள்ளது. 

 

கணவருக்கு, அவருடைய நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணத்திற்கு முன்பிருந்தே நெருக்கமான தொடர்பு இருந்துவந்துள்ளது. உறவினர் என்ற பெயரில் ரகசிய தோழியை அடிக்கடி வீட்டுக்கும் அழைத்துவந்துள்ளார் சந்தோஷ். அவர்கள் இருவருக்கும் உள்ள நெருக்கம் குறித்து அரசல் புரசலாக தெரியவந்ததை அடுத்து, சந்தோஷுக்கும், கோமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதையடுத்து, தான் இனிமேல் அந்தப் பெண்ணை சந்திக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறார் சந்தோஷ். 

 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சந்தோஷ் தனது உறவுக்கார பெண்ணுடன் தன்னுடைய வீட்டில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். வெளியே சென்றிருந்த கோமதி, வீட்டுக்கு வந்தபோது அவர்கள் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து கணவன், மனைவியிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இனியும் கணவருடன் வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்த கோமதி, புதன்கிழமை (நவ. 24) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். கோமதியின் சடலம், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

 

திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டிருப்பதால் இதுகுறித்து உதவி ஆணையர் நாகராஜன் நேரடியாக விசாரணை நடத்திவருகிறார். மேலும், சேலம் வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரித்துவருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது