Skip to main content

மனைவியால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்காக…  வீரமரணம் அடைகிறேன்! இளம் கணவனின் கண்ணீர் மரணம்!

Published on 24/05/2020 | Edited on 24/05/2020
 trichy district ariyamangalam


 

திருச்சி அரியமங்கலம் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் பிரபு (வயது 27). காமராஜர் பகுதியில் இனிப்பு கடை நடத்தி வருகிறார்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாமினி என்பவரோடு திருமணம் நடந்து 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தாமினி கணவரை பிரிந்து குழந்தையுடன் தாய் வீடு சென்று விட்டார்.

 

இந்த நிலையில் வீட்டில் கடந்த 21ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பிரபு தூக்கு மாட்டி தற்கொலை முயன்றுள்ளார். அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

 

இது குறித்து அரியமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரபு தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற அறையில் அவர் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து உள்ளார். அதில் அவர் மனைவி மற்றும் குடும்பத்தார் குறித்து பல்வேறு விஷங்களை குறிப்பிட்டுள்ளார்.

 

அதில் குறிப்பாக திருமணம் ஆன சில நாட்களில் இருந்து பெண் வீட்டார் தரப்பில் இருந்து என் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. என் மனைவி தாமினி என்னுடன் எளிமையான வாழ்க்கை வாழ விரும்பவில்லை. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானதோடு, என் குடும்பத்தாரும் நிம்மதி இழந்து விட்டனர்.

 

 trichy district ariyamangalam  - Husband's letter



குழந்தை பிறந்த 10 நாளில் இருந்து என் மனைவி என்னிடம் இருந்து பிரிந்து விட்டார். என் குழந்தையை பார்க்க சென்றால் காட்ட மறுக்கின்றனர். என் மனைவியின் அத்தை சந்திரா என்னிடம் நாங்கள் 10 பேரும் அரசு வேலையில் இருப்பவர்கள் நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டினார். கடந்த 20ம் தேதி சமாதானம் பேசி இருவரையும் வாழ வைக்கிறோம் என்று கூறினார்கள்.

 

அடுத்த நாளே மதியம் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த டூவிலர், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு என் குடும்பத்தை அழித்து விடுவதாக மிரட்டினர். என் குடும்பத்தை காப்பற்ற வேறு வழியில்லாத காரணத்தால் நான் வீரமரணம் அடைகிறேன். நான் கோழை அல்ல.

 

என் குட்டி பையா, அழகே, அன்பே, மகனே, சித்தப்பா, அவ்வா, தாத்தா இருக்காங்க, கவலைப்படாதே! நம்ம குடும்பத்தை காப்பத்த வேற வழி தெரியலடா, டேய் சந்துரு நீயும், உன் பொண்டாட்டியும் தான் அப்பா, அம்மான்னு, சொல்லி வளடா, அவனுக்கு ஏக்கம் வராத அளவுக்கு வளடா, நல்லபடியா பாதுக்கோ, புள்ளைய நேர்மையா வளடா, என் உயிர் நண்பர்களும் என்னை மன்னிச்சிடுங்க, தம்பி சந்துரு சட்டம் தன் கடமையை செய்யும், நம்ப குடும்பத்துக்கு துணையா இருடா !

 

அப்பாவி ஆண்களுக்கு எதிராக பெண் வன்கொடுமை சட்டத்துக்கு எதிராக இது சமர்ப்பணம். இதுவே சரித்திரம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 

இது குறித்து அரிமங்கலம் போலிசார் தாமினி, தாமினி தந்தை கருணாநிதி, சந்திரா, அமுதா, உதயகுமார், தனலெட்சுமி, ஜோதீஸ்வரன், ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.