Skip to main content

மனைவியின் சந்தேகத்தால் கணவர் தற்கொலை;காவல்துறை கைப்பற்றிய வீடியோ பதிவு

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

husband and wife incident police investigation

 

பல்லாவரம் அருகே,  தனது கணவர் வேறொரு  பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்பட்ட மனைவி,  மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்,  செல்போனில்  வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டு, அந்தப் பெண்ணின் கணவர் தற்கொலை செய்துகொண்டார். 

 

பல்லாவரத்தை  அடுத்துள்ள பொழிச்சலூர் - கமிஷனர் காலனியைச்  சேர்ந்தவர்  அலாவுதீன். இவருடைய மனைவி கடந்த சில நாட்களாக கணவர் அலாவுதீன் மீது  சந்தேகம் ஏற்பட்டு, சண்டை போட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, டியூசனில் இருந்த மகனை அழைத்து வருவதற்காகச் சென்ற சுனிதா வீடு திரும்பிய போது, அலாவுதீன் தூக்கில் பிணமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே,  சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடலைக் கைப்பற்றி, போஸ்ட்-மார்ட்டம் நடந்துள்ளது. பிறகு, உடல் ஒப்படைக்கப்பட்டு  இறுதி சடங்கும் முடிந்தது. 

 

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட அலாவுதீனின் செல்போனை  போலீசார் ஆய்வு செய்தனர். அலாவுதீன் தற்கொலை செய்வதற்கு முன், தனது செல்போனில், தன் சாவுக்குக் காரணம் யார் என்று குறிப்பிட்டுப் பேசிய வீடியோ இருந்துள்ளது. அதில் “14 ஆண்டுகளாகப் பணிபுரிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், அதே மருத்துவமனையில் பணி செய்யும் பெண் ஒருவருடன் என்னை தொடர்புபடுத்திப் பேசியதோடு, என் மனைவி மூலமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்தனர். என்னை விசாரித்த காவல்துறை ஆய்வாளர் தரக்குறைவாகப் பேசினார். என்னுடன் பணியாற்றிய பெண்ணையும், என்னையும் அவமானப்படுத்தினார்கள். மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் பிரவுன்தாஸ் மற்றும் சக பெண் ஊழியர்கள்தான் என் சாவுக்குக் காரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.