Skip to main content

உயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்!!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
incident kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் வசித்து வந்தார், காவலர் கோபி. இவர் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணி செய்து வந்துள்ளார். கடந்த 26.5.2020 அன்று மாலை பணிமுடிந்து தியாகதுருகத்தில் உள்ள தனது வீட்டுக்கு டூவீலரில் திரும்பி கொண்டிருந்தார். தியாகதுருகம் பைபாஸ் சாலை அருகே வரும் போது விபத்துக்குள்ளாகி கோபி உயிரிழந்து விட்டார்.

 

இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், 12 வயதில் ஹரிஹரன் என்ற மகன், நேத்ரா என்ற 10 வயது மகளும், வயதான தாய், தந்தை என கூட்டுக்குடும்பமாக உள்ளனர். இவர்களின் குடும்ப சூழ்நிலையை பார்த்த சக காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட உதவும் கரங்கள் என்ற குழுவை உருவாக்கி வாட்ஸ் அப்பில் மூலம் 2003 (பேட்ச்)ஆண்டில் பணிக்கு சேர்ந்த தமிழகத்தில் உள்ள காவலர்களுக்கு 5043 என்ற எண்ணை துவக்கி அதன் மூலம் கோபி குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தனர்.

 

காவலர்களின்  வேண்டுகோளுக்கிணங்கி காவல் துறையைச் சேர்ந்த பலர் நிதி உதவி அளித்துள்ளனர். அப்படி அவர்கள் அளித்த நிதி 25,21,500 ரூபாய் பணத்தை மறைந்த காவலர் கோபியின் நண்பர்களான சக காவலர்கள் இணைந்து நேற்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த பணத்தில் கோபி மகன் ஹரிஹரன் பேரில் சுமார் 9 லட்சம் ரூபாய்க்கு எல்.ஐ.சி பாலிசியும், கோபி மகள் நேத்ரா பெயரில் 10 லட்ச ரூபாய் பாலிசியும், கோபியின் தாய் தந்தை இருவருக்கும் இரண்டரை லட்ச ரூபாய் அவர்களின் அந்திமகால செலவினங்களுக்கும். கோபியின் மனைவி காஞ்சனாவிற்கு 2,60,000 ரூபாய் அவரது குடும்ப செலவிற்கும். இதுயில்லாமல் 3000 ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு பாலிசியையும் எடுத்து இதற்கான ஆவணங்களையும், பணத்தையும் அவர்கள் கையில் கொடுத்தனர்.

 

இப்படி தனது கணவர் இறந்தும் அவரது சகோதரர்கள் போல உதவி செய்தசக காவலர்கள் செய்த உதவியை கண்டு அவரது மனைவி காஞ்சனாவும், தனது பிள்ளை இறந்தும் தங்கள் பிள்ளைகள் போல தங்களுக்கு உதவி செய்த காவலர்களை பார்த்து கோபியின் பெற்றோர்களும் கலங்கிய கண்களுடன் நன்றி தெரிவித்து கொண்டனர். இந்த காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

 

கோபி குடும்பத்திற்கு தமிழக அளவில் பல்வேறு காவலர்கள் உதவி செய்துள்ள சக காவலர்களுக்கு அந்த குடும்பத்தினரும் கோபியின் சககாவல்  நண்பர்களும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ளனர். இதேபோன்று சக காவலர்கள் குடும்பம் கஷ்டப்படும்போது அவர்களுக்கு நாங்கள் உதவும் கரங்களாக இருப்போம் என்கிறார்கள் 2003 பேட்ஜை சேர்ந்த காவலர்கள். கணவரை இழந்து தவித்த அந்த குடும்பத்தினருக்கு இந்த மிகப்பெரிய உதவி என்கிறார்கள் மறைந்த காவலர் கோபியின் உறவினர்கள் காவலர்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ள இந்த மனித நேய உதவி பலரையும்  மனம் நெகிழ வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.