Skip to main content

"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்!" -ஹெச்.ராஜா

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
hraja in salem

 

சேலத்தை சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ கே.என்.லட்சுமணன், உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை நலம் விசாரிப்பதற்காக சேலம் வந்திருந்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:


கரோனாவால் இந்தியாவில் 50 கோடி பேர் வரை பாதிக்கப்படலாம் என உலக நாடுகள் கணித்திருந்தன. இந்திய அரசு, சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுத்ததால் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் மரணங்கள் 2.6 சதவீதமாக உள்ளது. 

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இழப்பில் இருந்து மீண்டு வரும். வேலையிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு, ஓராண்டுக்குள் தொழில்துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும். 

 

 


இந்தியாவில் தற்போது தினமும் 2 லட்சம் பிபிஇ உடைகளும், 2 லட்சம் என்95 முகக்கவசங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் பிசிஆர் மற்றும் துரித பரிசோதனை கருவிகளையும் நாமே தயாரிக்கும் வகையில், இந்திய மருத்துவத்துறை தற்சார்பு கொள்கையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருந்து இதுவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வெளிமாநில தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். 

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அரசின் சாதனைகள் கடிதங்கள் மூலமாக 10 கோடி வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க உள்ளோம்.


 

nakkheeran app




சீன எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து திருமாவளவன், தன் இணையதள பக்கத்தில் இந்திய&சீன எல்லையில் கோபேக் மோடி என பதிவிட்டுள்ளார். ஒரு போலியான படத்தை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவன் ஒரு தீய சக்தி. அவர் பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துவோம்.

திமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும், அனைத்து சமூகத்தினரையும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். நல்ல மனநிலையில் உள்ள தலைவர்கள் யாருமே அங்கு இல்லை. புதிதாக பாஜக தலைவராக பொறுப்பேற்ற முருகனுக்கு வாழ்த்து சொல்லும் அரசியல் நாகரீகம்கூட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.