Skip to main content

"சாத்தான்குளம் வழக்கை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?"- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

"How long does it take to complete the Satankulam case?" - Madurai branch of the High Court question!

 

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்துறை காவலில் இறந்த வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

 

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கு சி.பி.ஐ. மாற்றப்பட்டு விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, இந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. கடந்த மார்ச் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், கரோனா உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் இந்த வழக்கு விசாரணையை முடிக்க இயலவில்லை. ஆகவே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாவட்ட நீதிமன்றம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 

இந்த வழக்கை இன்று (13/12/2021) விசாரித்த நீதிபதி முரளி சங்கர்,  “சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது. விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க  எவ்வளவு காலம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், இது தொடர்பாக, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 17- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்”. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.