Skip to main content

செல்ஃபோனில் விடிய விடிய மனைவி அரட்டை: எவ்வளவோ சொல்லியும் கேட்கல... கணவன் வெறிச்செயல்... போலீசார் அதிர்ச்சி!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

hosur husband and wife police investigation

 

ஓசூரில், செல்ஃபோனில் விடிய விடிய அரட்டை அடித்த மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 

இவருடைய மனைவி சிந்துஜா (27). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓசூர் நாராயண நகர் அடுக்குமாடி குயிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

 

கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. மேலும், மனைவியின் நடத்தையில் மணிகண்டனுக்கு சந்தேகம் எழுந்தது. அக்., 13- ஆம் தேதியன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

 

ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார். சம்பவத்திற்குப் பிறகு மணிகண்டனே ஹட்கோ காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூறாய்வுக்காக சடலம், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணிகண்டனையும் கைது செய்தனர்.

 

காவல்துறையில் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில், ''கடந்த சில மாதங்களாகவே சிந்துஜா யாரோ சில ஆண்களுடன் அடிக்கடி செல்ஃபோனில் பேசி வந்தார். மனைவிக்கு சிலருடன் தவறான தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் இனிமேல் யாரிடமும் செல்ஃபோனில் பேசக்கூடாது என்று சிந்துஜாவுக்கு தடை விதித்தேன். அப்போதும் அவர் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து விடிய விடிய செல்ஃபோனில் பலருடன் அரட்டை அடித்து வந்தார்.

 

Ad

 

மேலும், என்னையும், என் பெற்றோரையும் மரியாதைக் குறைவாகப் பேசினார். இந்த நிலையில்தான், எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. என் மனைவி இனியும் உயிருடன் இருந்தால் எனக்கு மன உளைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்பதால் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்,'' என தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.